Transcription
அன்புக்குரிய பரிசுத்தவான்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நான் இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிற இந்த பரிசுத்தவானை பற்றி அநேகமாக நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் இவர் ஒரு மிஷனரியோ, தீர்க்கதரிசியோ, போதகரோ, பிரசங்கியோ, பாஸ்டரோ இல்லை. இவர் ஒரு இசை கலைஞன். தன் இசையை ஆண்டவராகிய இயேசுவுக்கு அர்ப்பணித்து, தன்னை ஒரு இசைக்கருவியாக்கி, ஒரு தேசத்தை உழுக்கிய, தட்டி, ஒழுப்பிய சமரசமற்ற ஓர் இசை கலைஞன்.
சுமார் 30 வருடங்களுக்கு முன், பல நல்ல ஆவிக்குரிய ஆங்கில பாடல்களை நாங்கள் தமிழாக்கம் செய்ய முயன்ற காலத்தில் நான் இவரை பற்றி கேள்விப்பட்டேன். என்றைக்காவது ஒரு நாள் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்கு நான் இவரை அறிமுக செய்ய வேண்டும் என்று அன்று தீர்மானித்தேன். இதோ இன்று அவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
இவருடைய பெயர் கீத கிரீன். இவர் அசாத்தியமான இசைத்திறமை உடையவர். இசைத்துறையில் பேர், புகழ், செல்வாக்கு ஆகிய எல்லாம் கிடைத்தும் அவர் அவைகளை பின்பற்றவில்லை. அவர் அந்த பாதையை விட்டுவிட்டு வேறொரு பாதையில் நடந்தார். அது மெய்யான பாதை. ஆண்டவராகிய இயேசுவை அறிந்து வாழ்ந்த ஒருவர், தனக்கு ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தை, மன மாற்றத்தை அகில உலகத்திற்கும் இசையால் வெளிப்படுத்தினார். இவர் வாழ்ந்த வாழ்க்கை, இவர் பாடிய பாடல்கள், இவர் வடித்த கண்ணீர், இவர் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் இன்றைய கிறிஸ்தவ உலகில் நம்மை ஒருபுறம் உற்சாகப்படுத்துகின்றன, மறுபுறம் எச்சரிக்கின்றன, உருவ குத்துகின்றன.
வாருங்கள், இவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இவரோடு சேர்ந்து நாம் ஒன்றரை மணி நேரம் பயணிப்போம்.
இளமை பருவம்: இசை மேதையின் பிறப்பு. கீத கிரீன் 1953ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புரூக்லின் பகுதியில் உள்ள சீப்ஸ் ஹெட் பே என்னும் இடத்தில் பிறந்தார். அவருடைய அப்பா ஹார்வி கிரீன் லாசி ஏஞ்சலஸில் இசை தயாரிப்பு துறையில் பணியாற்றினார். அவருடைய அம்மா பிக் பேண்ட் என்ற ஒரு இசைக்குழுவில் பாடகி. இசை இந்த குடும்பத்தின் நாடி நரம்புகளில் ஓடியது. கீத்தும் சிறுவயதிலிருந்தே இசை மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
அவருடைய நான்காவது வயதில் கீர்த்தின் குடும்பம் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் உள்ள கனோகா பார்க் என்ற பகுதியில் குடியேறியது. அங்கேதான் கீர்த் வளர்ந்தார். கீர்த் கிரீன் திறமையால் உருவான இசைஞானி என்பதை விட பிறப்பால் உதித்த இசைஞானி என்று சொல்லலாம். ஆயினும் அவர் தான் பெற்ற இசைஞானத்தில் அசதியாய் அமர்ந்துவிடாமல் ஊக்கத்தோடு இசையை கற்றார். குழந்தை பருவத்திலேயே கடுமையாக உழைத்தார். ஒன்பதாவது மாதத்தில் சரியான சுறுதியில் பாட தொடங்கினார். இரண்டு வயதில் இசைப்போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றார். மூன்று வயதில் இசைந்து பாடும் ஹார்மனியில் பாடினார். யுகலேலி, பியானோ ஆகிய இசைக்கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவர். ஏழு வயதில் த சவுண்ட் ஆப் மியூசிக் நாடகத்தில் குழந்தை நடிகராக நடித்தார். அவர் தன் 11 வது வயதில் வெளியிட்ட முதல் இசை ஆல்பம் ஹவாயில் முதல் பத்தில் இடம்பெற்றது. அதே வயதில் அவர் ஒரு புகழ்பெற்ற ரிக்கார்ட் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்தார். இந்த வயதில் இப்படிப்பட்ட சாதனை இதற்கு முன் வேறு யாரும் செய்ததில்லை. புகழ்பெற்ற ஆங்கில நாளேடு டைம் மேகஸன் இளவயதில் ஹாலிவுட்டின் புதிய நட்சத்திரம் என்று இவரை புகழ்ந்தது. உயிர்நிலை பள்ளியில் சேரும்போதே இவர் செலபிரிட்டி என்ற நிலையில் அடைந்துவிட்டார். இசைத்துறையில் பேரும் புகழும் பெற வேண்டும் என்பதே அவருடைய வெறி. இந்த குறிக்கோளோடு அவர் ஓட ஆரம்பித்தார்.
இவருடைய பெற்றோருக்கு இவர்தான் ஒரே பிள்ளை என்று தெரிகிறது ஏனென்றால் இவருக்கு உடன் பிறந்தவர் இருந்தது போல் தெரியவில்லை. அவருடைய அப்பா ஒரு யூதர், அம்மா கத்தோலிக்கர். ஆகவே கீர்த்தின் குழந்தை பருவம் இரு மதங்களின் கலாச்சார கலவையில் வளர்ந்தது. இவருடைய பெற்றோர் விசுவாசிகளோ, கிறிஸ்தவர்களோ, ஆவிக்குரியவர்களோ இல்லை. ஆனாலும் அவருடைய வீட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தன. கீர்த் அந்த கட்டுப்பாடுகளை விரும்பவில்லை. அவர் சுதந்திரமாக வாழ விரும்பினார். அதனால் அவர் ஒருவிதமான கலகக்காரனாகத்தான் வாழ்ந்தார். பல நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் ஊரின் மைதானங்களில் நண்பருடன் புல்லில் உட்கார்ந்து கித்தார் வாசித்தார், புகைத்தார். பலமுறை அவர் பெற்றோரடு சண்டை போட்டுவிட்டு வீட்டிலிருந்து ஓடிவிட்டார். இது அவருடைய வாடிக்கை.
நாம் 1970களின் அமெரிக்காவையும், கலிபோர்னியாவையும், ஹாலிவுட்டையும் பற்றி பேசி கொண்டிருக்கோம் என்பதை மறக்க வேண்டாம். அப்போது ஹிப்பி கலாச்சாரம் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. ஃபிளவர் பவர், பீஸ், லவ், மலர் வல்லமை, சமாதானம், அன்பு இதுதான் அன்றைய ஹிப்பி கலாச்சாரத்தின் கோஷம். இவைகளை விவரிக்க இப்போது நேரமில்லை. மதம், மத சடங்குகள், திருமண வாழ்க்கை, ஒழுக்கம் அனைத்தும் கேள்விக்குள்ளான காலமது. மக்கள் பாரம்பரியங்களை உதறினார்கள். மதத்தை புறக்கணித்தார்கள். கீத் நீந்து கொண்டிருந்த இசைத்துறை ஹிப்பி கலாச்சாரம் என்ற நதியின் ஒரு சிறு ஓடை. ஹிப்பி கலாச்சாரம் ஹாலிவுட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை சொல்லவும் வேண்டுமோ என்ன. அதற்கு உறம்போட்டு வளர்த்தவர்களே அவர்களதான். இதில் ஒரு அங்கம். அவருடைய புகைப்படத்தை பாருங்கள். நீண்ட சுழல் முடி, சுதந்திரமான தோற்றம், அசல் ஹிப்பி.
ஆன்மீக தேடல். அந்த காலத்திற்கு இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. மக்களுக்குள் ஒரு ஆவிக்குரிய தேடல் இருந்தது. அவர்கள் புறம்பான செயல்களை விட்டுவிட்டு உள்ளான ஏதோ ஒன்றை தேடினார்கள். புறம்பான செயல்களில் மக்கள் திருப்தி அடையவில்லை. எனவேதான் மக்கள் பாரம்பரிய சபை முறைமைகளை விட்டு விலகினார்கள். மதத்தை வெறுத்தார்கள். இந்த நாட்களில் தான் யோகா, தியானம், புத்த மதம், கிரிஸ்டல் வாசிப்பு, விசித்திரமான ஆன்மீக வழிகள் போன்றவை பிரபலமாகின. கிரிஸ்டல் ரீடிங் என்றால் மரகத கற்களுக்கு விசேஷமான ஆவிக்குரிய சக்தி உண்டென்றும், அதை கைகளால் பிடித்தால் அல்லது உடலில் வைத்தால் ஆற்றலை உணரலாம் என்றும் சிலர் நம்பினார்கள். மரகத கற்கள் மூலம் சிலர் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளவும் முயன்றார்கள்.
கீத்கிரீனும் இதுபோன்ற வழிகளில் செல்ல ஆரம்பித்தார். தேவன் ஒருவர் இருக்கிறார் என்ற பொதுவான நம்பிக்கை அவரிடம் எங்கோ ஒரு மூலையில் இருந்தது. ஆனால் உண்மையான தேவன் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என ஏக்கமும் அவரிடம் இருந்தது. சத்தியத்தை அறிய வேண்டும், பார்க்க வேண்டும், தன் வாழ்க்கைக்கு ஒரு திசை வேண்டும், அந்த வழியை காண வேண்டும் என்ற ஆர்வம், ஆவ ஆசை அவர் உள்ளத்தில் இருந்தது. அவர் உண்மையை தேடினார். ஆவிக்குரிய வாழ்க்கை ஆசித்தார். வெளிப்படை வெற்றிக்கு உள்ளே ஒரு வெற்றிடம். வெளியே பார்வைக்கு வெற்றி, பாராட்டுக்கள், புகழ், வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இளம் கீர்த்தியின் உள்ளத்தில் ஒரு பசி. புகழுக்காக இல்லை, பணத்துக்காக இல்லை. ஒரு ஆழமான பசி. நான் யார்? என் வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்பதை அறியும் பசி. இந்த பசியை பற்றி அவர் ஒருமுறை எனக்கு, "ஒரே ஒரு ஆசை, என் உள்ளத்தில் இருந்த அந்த வெற்றிடத்தை நிரப்ப யாராவது இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டே இருந்தேன்" என்று கூறினார்.
பெரும்பாலான வாலிபர்களை போல இவரும் திரையுலகை நோக்கி ஓடினார். திரையுலக பாணி வாழ்க்கைக்காக இயங்கினார். திரையுலகத்தில் சாதிக்க விரும்பினார். அதே நேரத்தில் மெய்யான ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் தேடினார். புறம்பான, தற்காலிகமான, நிலையற்ற, கட்டுப்பாடற்ற, பொருளற்ற சந்தோஷத்தை அல்ல. உள்ளான, நிலையான, முழுமையான, நிலைத்திருக்கும் தேவன் மட்டுமே தரக்கூடிய சந்தோஷத்தை தேடினார். தன் ஆவிக்குரிய பசியை தீர்க்க அவர் பல வழிகளை தேடினார். பல பாதைகளை பயணித்தார். பசி தீரவில்லை. தாகம் தனியவில்லை. இருள் விலகவில்லை. ஒளி கிடைக்கவில்லை. இறுதியில் அவர் தேடிய ஒளி கிடைத்தது. உள்ளத்தில் ஒளி வந்தது.
கீத கிரீன் சத்தியத்தை தேட ஆரம்பித்தார். ஆழமான தேடல். இந்த தேடலில் ஒரு கட்டத்தில் அவர் இன்பத்திற்காகவோ, போதைக்காகவோ அல்ல, தேவனை காணலாம் என்ற நம்பிக்கையினால் போதை பொருட்களையும் எடுக்க ஆரம்பித்தார். மூஞ்சாடுதல் என்ற போதை மயக்கம் அனுபவம் ஏற்பட்டால் கனவுகள் தோன்றும் என்றும், ஏதோ ஒரு ரூபத்தில் தேவன் தோன்றுவார், அவரை அறியலாம் என்றும் இவர் நினைத்தார். இது இன்று நமக்கு விசித்திரமாக தோன்றலாம். ஆனால் அந்த காலத்தில் பலர் அப்படித்தான் நினைத்தார்கள், செய்தார்கள். இன்றும் வட இந்தியாவில் பல சாமியார்கள் இப்படி செய்வதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தொடர்வோம். ஆனால் போதை மயக்கத்தில் சுயநினைவிழந்து மிதந்த போதும் தேவன் அதில் இல்லை என்று அவருக்கு தெளிவாக தெரிந்தது. அவர் தொடர்ந்து சத்தியத்தை தேடினார். என்னென்ன வழிகளில் சத்தியத்தை தேடலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்து ஒவ்வொன்றாக முயற்சித்தார். ஒவ்வொன்றாக தோற்றது. தோற்ற வழிகளை பட்டியலிருந்து நீக்கினார். ஒருவேளை பரிசுத்தமாக வாழ்ந்தால் தேவனை அடைய முடியுமோ என்ற எண்ணத்தில் அவர் தன்னைத்தானே பரிசுத்தமாக்க முயன்றார். அதனால் சில காலம் அசைவம் சாப்பிடுவதை கூட நிறுத்திவிட்டு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்டார். சுத்தமாக வாழ முயன்றாராம். ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. அவருக்குள் இருந்த அந்த வெற்றிடத்தை எதுவும் நிரப்பவில்லை. அவர் தயாரித்து வைத்திருந்த பட்டியலில் கடைசியாக இயேசு என்ற ஒரே ஒரு பெயர் மட்டுமே மீதி இருந்தது. இந்த பெயரை அவரால் பட்டியலில்ிருந்து நீக்க முடியவில்லை. ஏனெனில் இயேசுவின் வார்த்தைகள் அவருடைய மனதை கவர்ந்தன. ஆனாலும் அவர் இயேசுவை நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ்வதற்கு வழி சொல்லும் ஒரு குருவாக, ஒரு ஆசானாக, ஒரு ஆன்மீக வழிகாட்டியாக மட்டுமே பார்த்தார். அவர் கிறிஸ்தவத்தை விரும்பவில்லை. பாவம், பாவத்திற்கு தண்டனை, நரகம் ஆகியவைகளை அவர் விரும்பவில்லை. அவர் விரும்பியதெல்லாம் அன்பு, அமைதி. இயேசு தேவனாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. எனவே இயேசு கிறிஸ்து யார் என்று அவருக்கு தெரியாது.
இசைதான் என் உயிர். ஆனால் அது போதுமா? உண்மையாகவே தேவன் யார்? இயேசு இவர் யார்? என்ற பல கேள்விகள் அவருடைய உள்ளத்தில் அலைகளை போல் மோதின. இந்த கேள்விகளுக்கு பதில் தேடி அவர் பல வழிகளை தேடினார். பல பாதைகளில் பயணிக்க தொடங்கினார். இருளுலகின் சக்திகளை ஆராய்ந்தார். மந்திரங்களை முயற்சித்தார். விதவிதமான ஆன்மீக வழிகளை தேடினார். இந்து மதம், புத்த மதம் போன்ற பிற மதங்களிலும் தத்துவங்களிலும், ஹிப்பி கலாச்சாரம் போன்ற வேறுபல கலாச்சாரங்களிலும் அவர் ஒளியை தேடினார். சத்தியத்தை தேடினார். தியானங்களிலும் தர்மங்களிலும் மூழ்கினார். குருக்களையும் சநியாசிகளையும் சந்தித்தார். பல நூல்களை படித்தார். எல்லாரிலும், எல்லாவற்றிலும் அவர் ஒன்றே ஒன்றை தேடினார். சத்தியம். ஒரு நேரத்தில் அவர் தன்னை நியூ ஏஜ் சீக்கர் என்று கூட அழைத்தார். "நான் யாரும் இல்லாதது போல் உணர்கிறேன். ஆனால் யாரோ ஒருவரிடம் சேர்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது" என்று அவர் சொன்னார்.
கீத்துக்கு நாள் குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது. அவர் தன் நாட்குறிப்பில் ஒரு இடத்தில், "மை ரூட்ஸ் டேங்கில் என் வேர் தொங்குகிறது" என்று எழுதியிருக்கிறார். இது அன்றைய அவருடைய உண்மையான நிலையை விளக்குகிறது. என் வேர்கள் நிலத்துக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கின்றன. நான் திசை தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறேன். நிலையில்லாமல் அறிந்து கொண்டிருக்கிறேன். அடித்தளம் இல்லாமல் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்பதே இதன் பொருள். அவர் தேடிய எதுவும் அவருடைய உள்ளத்தை நிரப்பவில்லை. அவர் சத்தியத்தை தேடி துடித்தார். அப்போது கீர்த்துக்கு வயது 19. ஒரு பக்கம் அவர் சத்தியத்தை வேட்கையோடு தேடிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ஹாலிவுட்டில் இசை உலகில் இடம்பிடிக்க போராடிக் கொண்டிருந்தார். தானே எழுதி, இசையமைத்து, பதிவு செய்த பாடல் அடங்கிய ஒலிநாடாக்களை பெரிய ரிக்காடி நிறுவனங்களுக்கு கொண்டு சென்று கொடுத்தார். தன் பாடல்களை அவர்களுக்கு வாசித்து காட்டினார். வாய்ப்புகளை தேடினார். பல கதவுகளை தட்டினார். யாராவது தன்னை கவனித்து விட மாட்டார்களா என எதிர்பார்ப்பு. இரவு நேரங்களில் வாய்ப்பு கிடைத்த இடங்களில் வாசித்தார். கிளப்ஸ், பப்ஸ், நைட் கிளப் ஹாலிவுட்டுக்கு வாசலை திறக்கக்கூடிய எந்த இடமானாலும் வாசித்தார்.
வாழ்க்கை துணையாய் வந்த மெலடி. ஒரு நாள் தன் பாடல்களை எடுத்துக்கொண்டு ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு மெலடி என்ற ஒரு பெண் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கீத் தன் பாடல்களை அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். ஒரு வாரத்துக்கு பிறகு கீத் அந்த ஸ்டுடியோவை தொடர்பு கொண்டு மெலடியோடு பேசினார். "ஹாய், நான்தான் கீத். என் பாடல்களை கேட்டீர்களா?" என்று வினவினார். மெலடி குழப்பத்தோடு, "யார் நீ? உன் பாடுகளை கேட்கவில்லை" என்று பதிலளித்தார். "நீங்கள் அந்த பாடுகளை கேட்க வேண்டும். தயவு செய்து கேளுங்கள்" என்று கீர் வற்பொறுத்தினார். உரையாட தொடர்ந்தது. மெலடிக்கு கீர்த்தின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஒரு நாள் என்னோடு மதிய உணவு சாப்பிட வருவீர்களா என்று கீர்த்து கேட்க, இவன் சற்று வினோதமானவன் போலும் என்று நினைத்தாலும், "சரி, வருகிறேன்" என்று மெலடி பதில் சொன்னார். பிறகு அவர் கீர்த்தி பாடலை கேட்டு ஆச்சரியம் அடைந்தார். இந்த அளவுக்கு திறமையுள்ள இவர் இன்னுமா ஹாலிவுட்டில் சாதிக்கவில்லை என ஆச்சரியப்பட்டார். அவருடைய சந்திப்பு தொடர்ந்தது. உறவு மலர்ந்தது. இவர்கள் இருவரும் இணைந்ததற்கு மிக முக்கியமான காரணம் இசை மட்டுமல்ல. அதைவிட இன்னொரு முக்கியமான, ஆழமான காரணம் இருந்தது. ஆம், இருவரும் ஒரு ஆவிக்குரிய தேடலில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். மெலடி ஒரு யூத பெண். ஆனால் யூத மதத்தின்படி அவர் வளரவில்லை. அவரும் கீர்த்தை போல ஜோதிடம், மந்திரம், அமானுஷ்ய சக்திகள், அதிஷ்ட கற்கள், மாயாஜாலம், கிழக்கத்திய தத்துவங்கள் என பல விசித்திரமான ஆன்மீக வழிகளில் போய்க்கொண்டிருந்தார். புத்த மதத்தில் ஆர்வம் கொண்டு ஜப்பானுக்கு போய் புத்த சிந்தனையாலே பார்த்தார். ஆனால் அவர் தேடிய சத்தியம் எதிலும், எங்கும் கிடைக்கவில்லை. அவரும் கீர்த்தை போல சத்தியம், சமாதானம் ஆகியவைகளை அடைய தவித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் அவர் கியத்தை சந்தித்தார். தான் பயணிக்கிற அதே பாதையில் பயணிக்கிற ஒருவர். தான் தேடிக்கொண்டிருக்கிற அதே சத்தியத்தை தேடுகிற ஒருவர். இதுவே அவருடைய உறவுக்கு மிக முக்கியமான காரணம். சில நாட்களிலேயே இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். ஒரு நாள் கீத மெலடியை நோக்கி, "நான் உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன். உனக்கு சம்மதமா?" என்று கேட்டார். விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். கீத் மெலடியின் வீட்டில் குடியேறினார். அங்கிருந்து அவருடைய வாழ்க்கை பயணம் ஆரம்பமானது.
கீத் மெலடியின் வீட்டில் குடியேறிய போது நேராக அவருடைய புத்தக அலமாரிக்கு போனார். அங்கே இருந்த புத்தகங்களை பார்த்தார். ஜோதிடம், மந்திரம், கிழக்கத்திய மரஞானம், புத்த மதம், இந்து மதம் என பல புத்தகங்கள். மெலடி பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள். கீத அவளிடம், "இவைகள எல்லாம் தூக்கி எறிய வேண்டும்" என்று சொன்னார். மெலடி சற்று அதிர்ச்சி அடைந்தார். "மன்னிக்கணும், இது என் புத்தக அல மாதிரி. நான் எதை படிக்க வேண்டும், படிக்கக்கூடாது என்பதை தீர்மானிப்பது நான். உனக்கு விருப்பமில்லை என்றால் உன் புத்தகங்களை தூக்கி எறி" என்று பதில் சொன்னார். கீர் தலை அசைத்து, "இல்லப்பா, இவை உண்மை இல்லை. நான் இவைகளை படித்திருக்கிறேன். நீ போய்க்கொண்டிருக்கிற பாதைகளை நான் பயணித்திருக்கிறேன். நீ தேடுகிற சத்தியம் இவைகள் இல்லை. எனவே நாம் இவைகளை விட்டுவிட வேண்டும்" என்று பதிலளித்தார். இதுதான் கீர்த்தின் இயல்பு. உண்மையான தேவனை உண்மையாக அறிய வேண்டும் என்ற ஆவல். அதைத்தான் அவர் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தார். கீத் எப்போதும் ஒருபடி முன்னாலே செல்வதாகவும், தான் எப்போதும் கீத்துக்கு ஓரடி பின்னால் செல்வதாகவும் மெலடி உணர்ந்தார்.
அவருடைய திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் அவ்வளவு சுமுகமாக செல்லவில்லை. மிகவும் கடினமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவர்கள் இருவரும் இன்னும் அந்த பெரிய வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். வருமானம் கொஞ்சம் இருந்தது. கீத்து கச்சேரிகளிலும் மேடைகளிலும் வாசித்தார், பாடினார். கிளப்புக்கள், பப்புக்கள், நைட் கிளப்புகளிலும் வாசித்துக் கொண்டிருந்தார். அதில் கிடைத்த வருமானத்தைதான் அவருடைய வாழ்க்கை நகர்ந்தது. போதுமான வருமானத்துக்காக பீசா டெலிவரி செய்தார்கள். தங்களுடைய ஹிப்பி வண்டியில் பழைய உடைகளை வாங்கிக் கொண்டு போய் பல இடங்களில் விட்டார்கள். அவருடைய வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. ஆயினும் பொருளாதார நெருக்கடி இருந்தது. பல வேளைகளில் வெற்றியை நெருங்கி விட்டது போல் தெரிந்தது. ஆயினும் வெற்றி நழுவி போய்க்கொண்டே இருந்தது. கை கேட்டியது வாய் கேட்டவில்லை. ஹாலிவுட்டில் பிரபலமான நைட் கிளப்புகளில் கீத்துக்கு பெரும் ஆதரவும் ஆரவாரமும் கிடைத்தது வரவேற்பு கிடைத்தது. பெரிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவரை கவனித்தார்கள். அவர் பாடியபோது எல்லாரும் எழுந்து நின்ுடு கரவொலி எழுப்பினார்கள். சிலர் அவரை விமானத்தில் அழைத்துச் சென்று தங்களுடைய ஸ்டுடியோக்களில் பாட சொன்னார்கள். அவர் பாடினார், பாடினார். ஆனால் அதன் பிறகு எந்த பதிலும் இல்லை. வெற்றிக்கு ஒரு சென்டிமீட்டர் அருகில் போனார். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அதைவிட பெரிய சலிப்பு என்னவென்றால் அவருடைய ஆவிக்குரிய தேடலிலும் சத்தியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இது இது கீர்த்துக்கு அதிக வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. அவர் சத்தியத்தை தீவிரமாக தேடினார். உண்மையான தேவனை, உண்மையான வழியை அறிய வேண்டும் என்ற ஆவல் அவரை ஆட்கொண்டிருந்தது.
மாற்றம்: மனம் திரும்புதலும் மறுபடி பிறத்தலும். அவர் ஏற்கனவே தனக்கு தெரிந்த சில இசைக் கலைஞர்களை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இப்போது அவர்கள் முன்பு இருந்தது போல் இல்லாமல் வேறு விதமாக இருந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தார்கள். அவர்களிடம் மாற்றம் காணப்பட்டது. ஆனால் அது என்ன மாற்றம் என்று திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. வீட்டில் தன் மனைவி மெலடியிடம், "ஏ அவர்கள் மாறி இருக்கிறார்கள்? அவர்களிடம் ஏதோ இருக்கிறது. அது என்னிடம் இல்லை. அவரிடம் இருப்பதைதான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அதைத்தான் நான் விரும்புகிறேன். அதுதான் எனக்கு வேண்டும்" என்று கூறினார்.
அதை பெறுவதற்கு அவர் முயற்சிக்க ஆரம்பித்தார். மற்ற கிறிஸ்தவர்களைப் போல அவர் வாழ முயன்றார். இயேசுவின் போதனைகளை படித்து அவைகளை பின்பற்ற முயன்றார். நல்லவனாக வாழ வேண்டும் என்பதற்காக போராடினார். ஆனால் அவர் எந்த அளவுக்கு முயன்றாரோ அந்த அளவுக்கு தோற்றார். போதை பழக்கத்தில்ிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக போராடினார். ஆனால் அவருடைய பழக்கம் இன்னும் ஆழமாயிற்று. அவருடைய மனம் சோர்ந்தது. வருத்தம் அதிகமானது.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் கீத் மெலடியிடம் வா எங்காவது ஒரு சபைக்கு போவோம் என்று கூறினார். இருவரும் நீண்ட ஹிப்பி முடியுடன் வித்தியாசமான உடையில் தங்கள் பழைய ஹிப்பி வண்டியில் சபைக்கு சென்றார்கள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் வாசலில் இருந்த வரவேற்பாளர் வாயை பிளந்து பார்த்தார். ஆனால் புன்முறுதலோடு அவளை வரவேற்று அவள் இருக்க வேண்டிய இடத்தை காட்டினார். இருவரும் உள்ளே சென்று இருக்கைகளில் அமர்ந்து சுற்றி பார்த்தார்கள். மற்றவர்கள் அங்கிருந்த வேதாகமத்தையும் பாடல் புத்தகத்தையும் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தார்கள். கீர்த்து மெலடி பக்கம் திரும்பி என்னால் இங்கு இருக்க முடியாது வெளியே போகலாம் வா என்று மெல்ல சொன்னார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பே இருவரும் வெளியே போய்விட்டார்கள்.
பின் நாட்களில் கீத அந்த இடம் நமக்கு ஏற்ற விட இல்லை. அவர்கள் இயேசு தேவனுடைய குமாரன் என்று நம்புகிறார்கள். அது எனக்கு ஒத்து வராத விஷயம் என்று சொன்னார். ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவர் ஒரு சபையின் பெயரை சொல்லி இந்த சபைதான் உங்களுக்கு ஏற்ற சபை. நீங்கள் அங்கு போய் பாருங்கள் என்று கூறினார். அவர்கள் போனார்கள். அங்கு இருந்தவர்கள் மிக சாதாரணமான இயல்பான உடை உடித்திருந்தார்கள். முன்னால் மேடையில் நின்றவர் கூட விளையாட்டு வீரர்கள் அணிகிற ஜெர்சி போட்டிருந்தார். பரவாயில்லையே இந்த இடம் நம்முடைய சுவைக்கு கொஞ்சம் ஒத்தி இருக்கிறது என்ற உணர்வு இருவருக்கும் ஏற்பட்டது. இசைக்கருவிகள் வாசிக்க ஆரம்பித்தார்கள். செவிப்பறை கிழிந்துவிடும் அளவுக்கு இசை சத்தமாக இருந்தது. அது ஒரு கரிஸ்மேட்டிக் சபை. கூட்டம் ஆரம்பித்ததும் ஒருவர் திடீரென்று எழுந்து வேத வசனங்களை சத்தமாக உரைக்க ஆரம்பித்தார். அவர் வசனங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொருவர் அவரை விட சத்தமாக வேறு ஏதோ சொல்ல ஆரம்பித்தார். வேறொருவர் எழுந்து நின்று வேறோ ஏதோ பேசினார். கீத சுற்றி சுற்றி பார்த்துவிட்டு மெலடி இவர்கள் ஒரு மாதிரியானவர்கள் போல் தெரிகிறது இது நமக்குரிய இடமில்லை வா வெளியே ஓடிவிடலாம் என்றார். மெலடியும் சரி என்று சொல்லி இருவரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.
கீர்த்துக்கு இயேசுவை பிடிக்கும். இயேசு கூறிய அன்பு சமாதானம் இரக்கம் ஆகியவேலை பற்றிய போதனைகள் பிடிக்கும். ஒரு கட்டத்தில் அவர் நானும் கிறிஸ்தவன் தான் என்று சொல்ல தொடங்கினார். அந்த நேரத்தில் சமீபத்தில் இரட்சிக்கப்பட்டிருந்த அவருக்கு நெருக்கமான ராண்டி என்ற ஒரு நண்பர் எனது நீ கிறிஸ்தவனா நீ பாவத்தை ஒப்புக்கொள்ள மாட்டாய் பாவத்துக்கு பரிகாரமாகிய இயேசுவின் இரத்தத்தையோ இயேசு உனக்காக சிலுவையில் மரித்தார் என்பதையோ நரகத்தையோ நீ விசுவாசிக்கவில்லை சமாதானமும் அன்பும் தான் கிறிஸ்தவம் என்று நினைக்காதே அதுவல்ல கிறிஸ்தவம் என்று சொன்னான். இந்த வார்த்தைகள் கீர்த்தின் உள்ளத்தை தட்டி எழுப்பின. ராண்டி தொடர்ந்து கீர்த்திடம் நான் உன்னை ஒரு இடத்துக்கு அழைத்து செல்கிறேன் என்னோடு வா இது நீ இதுவரை போய் பார்த்த சபை இல்லை இது வேதாகம பாடம் நடக்கும் இடம் நீ வந்து பார் என்று அழைத்தார். கீத வேத பாடமா அது என்ன ரொம்ப அலுப்பாக இருக்கும் போல தெரிகிறதே என்று சலித்துக் கொண்டார். எப்படி இருக்கும் என்று போய் பாரு என்றார். கீத தயக்கத்தோடு ஒப்புக்கொண்டார்.
கீர்த்து மெலடியும் தூசியும் புகையும் நிறைந்த தங்கள் ஹிப்பி வண்டியில் மிக நீண்ட தூரம் ஓட்டிச் சென்றார்கள். அந்த இடம் ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தது. போய்க்கொண்டிருக்கும் போதே கீத்து இது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லிக்கொண்டே போனார். போய் சேர்ந்தார்கள். அழகான புல்வழி நல்ல மலர் தோட்டம் அந்த அழகான வீட்டின் வாசலில் இருவரும் இறங்கினார்கள். வீட்டுக்குள் போனார்கள். ஆச்சரியம் பல்வேறு பின்புலத்தில்ிருந்து வந்த சாதாரணமான மக்கள் அந்த வீட்டின் முன்னறையில் அமர்ந்திருந்தார்கள். இருவரும் உட்கார்ந்தார்கள். ஒரு சிறிய வீட்டு கூட்டம் அலங்காரமான சபை கூட்டம் இல்லை. ஒருவருடைய வீட்டில் நடத்தப்பட்ட வேதபாட வகுப்பு. வந்திருந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியோடு பேசி கொண்டிருந்தார்கள். பிறகு கென் என்ற ஒருவர் பேச ஆரம்பித்தார். அவர் பாவம் இரட்சிப்பின் தேவை இரட்சகர் தேவை பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட பலிகள் சிந்தப்பட்ட இரத்தம் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை ஆகியவைகளை குறித்து பேசினார். அவர் மிக முக்கியமாக இயேசு கர்மத்தை தொலைக்கிறார் என்று சொன்னது கீத்தின் இதயத்தில் பசுமரத்தாணி போல் குத்தியது. ஒருவன் நன்மை செய்தால் நல்லது நடக்கும் தீமை செய்தால் தீயது நடக்கும் என்று நம்புவது தான் கர்மம். கீத்தும் அப்படித்தான் நினைத்தால் கிறிஸ்தவமும் அப்படித்தான் என்பது கீர்த்தியின் எண்ணம். நன்மை செய்தால் தேவன் ஆசீர்வதிப்பார் என்பது அவருடைய புரிதல். ஆனால் இதோ இங்கு ஒருவர் வேறுவிதமாக சொல்லகிறார் பாவம் பலிகள் பரிசுத்தம் பாவ பரிகாரம் பாவ மன்னிப்பு இரட்சிப்பு கிருபை என்று அவர் பேசுகிறார் அவை நாம் சம்பாதிப்பவே அல்ல தேவன் அருளும் ஈவு என்று சொன்னார். முதன்முறையாக கீத் மெலடி இருவருமே தொடப்பட்டார்கள். பாவம் சிலுவை இரத்தம் இரட்சிப்பு இரட்சகர் என்ற செய்தியை அவர்கள் இதற்கு முன் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இப்போது பல கேள்விகள் எழுந்தன கேள்விகளுக்கான பதில்களும் உள்ளே எழுந்தன.
கூட்டத்தின் முடிவில் கென் யாராவது ஆண்டவரை ஏற்றுக்கொள்ள விரும்பினால் உங்கள் கையை உயர்த்துங்கள் நாம் ஜெபிக்க போகிறோம் என்று சொன்னார். மெலடி தலையை குனிந்து பிறர் என்ன செய்கிறார்கள் என்று ஓரக்கண்ணால் பார்த்தார். ஆச்சரியம் அதிர்ச்சி. ஏன் அருகில் இருந்த கீத்து கையை உயர்த்தி இருந்தார். மெலடி இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று பயத்தோடு நினைத்தார். தன்னை சுற்றி நடக்கும் பரிசுத்தமான காரியத்திற்கு தான் அந்நியமாகவும் அங்கு தான் வெறுமனே ஒரு பார்வையாளராக இருப்பது போல் மெலடி உணர்ந்தார். கென் கையை உயர்த்த சொன்னபோது தானும் பதிலளிக்க வேண்டும் என்ற இயக்கம் மெலடிக்கு இருந்தது ஆனால் கை உயரவில்லை. கூட்டம் முடிந்தது. கீர்த்தும் கென்னும் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார்கள். அன்றிரவு கீத்துக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது. மெலடி கையை உயர்த்தவில்லையே தவிர அவருக்குள்ளும் ஏதோ ஒன்று நடந்தது. இருவரும் புறப்பட்டு சென்றார்கள். அந்த நாள் அவருடைய இரட்சிப்பின் நாள்.
வீட்டுக்கு போய்க்கொண்டிருந்த போது மெலடி வண்டியில் அமைதியாக அமர்ந்திருந்தார். கீத்து மிக உற்சாகமாய் பேசி கொண்டிருந்தார். மெலடி என்னால் நம்ப முடியவில்லை என்னே சமாதானம் என்னே இளைப்பார்தல் நான் இதுவரை தேடிக்கொண்டிருந்த சத்தியத்தை இன்று கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு தேவனை தெரியும் தேவனை தெரியும். மெல்லடி இவ்வளவு நாள் நான் தவறாகவே நினைத்தேன் தவறாகவே வாழ்ந்தேன் கீத பேசிக்கொண்டே இருந்தார் மகிழ்ச்சியோடு ஜீவனோடு. ஆனால் மெலடி அமைதியாக இருந்தார். அவருடைய மனம் கனமாக இருந்தது. நான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான நேரத்தை தவறவிட்டு விட்டேனோ என்று அவர் உணர்ந்தார். அந்த வாரம் முழுவதும் அடுத்த வெள்ளிக்கிழமை விரவில் வந்துவிட வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் தான் அவருடைய மனதில் இருந்தது. மீண்டும் அந்த அறையில் இருக்க வேண்டும். அந்த கூட்டத்தை முன்னிறு நடத்திய கென் போன வாரம் கேட்ட யாராவது ஆண்டவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா அப்படியானால் உங்கள் கையை உயர்த்துங்கள் என்ற கேள்வியை மீண்டும் கேட்பார் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். அப்படி கேட்டவுடன் மெலடி கையை உயர்த்த ஆசைப்பட்டார். கீத் கண்டுபிடித்த சத்தியத்தை தானும் பெற விரும்பினார் ஏனென்றால் அவர்கள் இருவரும் தேடிக்கொண்டிருந்த சத்தியத்தை கீத் கண்டுபிடித்து விட்டார் என்பதை மெலடி தெளிவாக புரிந்து கொண்டார்.
ஒரு வாரம் கழிந்தது அடுத்த வெள்ளிக்கிழமை வந்தது இருவரும் அந்த வீட்டு கூட்டத்துக்கு போனார்கள். கென் பேச ஆரம்பித்தார். இதுதான் இதுதான் அந்த சத்தியம் இதுதான் நான் தேடிய சத்தியம் ஆண்டவரை நான் ஏற்க வேண்டும் என்று அவருடைய உள்ளத்தில் ஒரு துடிப்பு. நாம் ஜெபிக்க போகிறோம் யாராவது ஆண்டவரை ஏற்க விரும்பினால் கையை உயர்த்துங்கள் என்று கென் அழைத்தார். மெலடி தயங்கினார். இவர்தான் ஒவ்வொரு வாரம் இப்படி கேட்கிறாரே இதை பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசிக்கலாம் இது நான் எடுக்க போகிற ஒரு பெரிய முடிவு அடுத்த வாரம் முடிவு செய்யலாம் அவசரப்பட வேண்டாம் என்று எண்ணினார். அதே நேரத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் இந்த நேரத்துக்காக தானே ஒரு வாரம் காத்திருந்தேன் இந்த தருணத்தை தானே நான் ஒரு வாரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இப்போது அந்த தருணம் வந்ததும் நான் ஏன் தயங்குகிறேன் என்று தனக்குள் கேட்டுக்கொண்டார். இருப்பினும் கையை உயர்த்த முடியவில்லை. கையை உயர்த்த முடியாத அளவுக்கு கனமாக இருந்தது. கென் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இன்றிரவு இங்கே இப்போது தேவன் ஒருவரோடு பேசி கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஆண்டவரை ஏற்க வேண்டும் என்று மெதுவாக பேசினார். மெலடியின் உள்ளம் பதறியது. இவருக்கு எப்படி தெரிந்தது என் இதயத்தி துடிப்பை கேட்டுவிட்டாரா. ஆனால் அது கென்னின் பேச்ச அல்ல தேவனே தன்னோடு பேசினார் என்பதை மெலடி புரிந்து கொண்டார். உடனே மெலடி தன் கையை உயர்த்தினார்.
அந்த தருணத்தில்ிருந்து கீர்த்தும் மெலடியும் முற்றிலும் மாறிப்போனார்கள். இருவரும் தங்கள் வாழ்வை முழுமையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள். அவர்கள் ஆண்டவராகிய இயேசுவை கண்டார்கள். அவர்கள் தேடிய சத்தியத்தை ஆண்டவராகிய இயேசுவில் கண்டுபிடித்தார்கள். அந்த நேரத்தில் அவருக்கு வயது 21. இருவரும் தங்களுடைய விசுவாச வாழ்க்கையில் புதிதாக அடியெடுத்து வைத்திருந்தார்கள். தங்களுடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்கு ஏற்றார் போல் மாற வேண்டும் பிறருடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நெருப்பு அவர்களை பற்றி பிடித்தது. ஓட வேண்டும் பிரசங்கிக்க வேண்டும் உலகத்தை மாற்ற வேண்டும் என்ற துடிப்பு அவருடைய வேகத்தையும் முனைப்பையும் கண்ட கீர்த்தின் நண்பர் ராண்டி ஓ கீர் நீ கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் நீ வேதாகமத்தை இன்னும் ஒருமுறை கூட சரியாக படிக்கவில்லை கிறிஸ்து விசுவாசத்தை பற்றி உனக்கு இன்னும் சரியாக தெரியாது அதற்கு முன் நீ கிறிஸ்துவை பிறருக்கு பிரசங்கிக்க வேண்டும் என்ற உன் எண்ணம் ஆரோக்கியமானது அல்ல உன் பாரத்தை நான் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன் ஆனால் அதற்கு முன் நீ நல்ல முதிர்ந்த வளர்ந்த தேவ மக்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அதற்கு கீ சலிப்புடன் சரி ஆனால் அப்படிப்பட்ட ஆளை நான் எங்கு போய் தேடுவது யார் எனக்கு கற்று தருவார்கள் என்று கேட்டார். பிராண்டி ஒருவர் இருக்கிறார் மிகவும் முதிர்ந்தவர் ஆழமான விசுவாசி கொஞ்சம் கண்டிப்பானவர் உன்னுடைய தெருவிலேயே இருக்கிறார் என்று சொன்னார்.
அடுத்த நாள் ஒருவர் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது போய் கதவை திறந்தார் அங்கு ராண்டி சொன்ன மனிதர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு வயது 87 அவர் ஒரு சீனர் பெயர் ரிச்சர்ட் லோ. அவர் வீட்டுக்குள் வந்தார் கீத்தை கட்டி அணைத்து மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றுொ சொன்னார். மெலடிக்கும் வாழ்த்து சொன்னார். இவர் வழக்கமான சாதாரணமான விசுவாசி இல்லை. இவர் இயேசுவின் உண்மையான சீடர் என்று அவர்கள் கொஞ்ச நேரத்தில் புரிந்து கொண்டார்கள். ரிச்சல்ட் லோ 70 வருட கிறிஸ்தவர். அவர் சீனாவில் இருந்த போதே இயேசுவை ஏற்றுக்கொண்டார். வாழ்க்கையின் பல பிரச்சனைகள் நடுவிலும் விசுவாசத்தில் உறுதியாக நின்றார். இப்போது அமெரிக்காவில் கீர்த்தியின் வீட்டுக்கு அருகில் தான் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தார். வேதாகமத்தை எப்படி வாசிக்க வேண்டும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் ஜெபம் என்றால் என்ன எப்படி ஜெபிக்க வேண்டும் எப்படி தேவனோடு நடக்க வேண்டும் விசுவாச வாழ்க்கை என்றால் என்னவென்று கிறிஸ்துவோடும் கிறிஸ்துவ வாழ்க்கையோடும் தொடர்புடைய அனைத்தையும் அவர் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அவரோடு இருவரும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் ஐக்கியம் கொண்டார்கள். அவர்கள் அவரை தங்கள் ஹிப்பி வேனில் ஏற்றுக்கொண்டு டோனட் கடைக்கு அழைத்துச் சென்றார்கள் காபி குடித்தார்கள் டோனட் சாப்பிட்டார்கள் சேர்ந்து வேதாகமத்தை வாசித்தார்கள் சேர்ந்து ஜெபித்தார்கள். எளிமையான கிறிஸ்துவ வாழ்க்கை தொடர்ந்தது. வேதாகமத்தில் ஒரு சந்தேகம் ஒரு கேள்வி வந்ததும் கீத்து வேதாகமத்தை எடுத்துக்கொண்டு ரிச்சர்டின் வீட்டுக்கு நேராக ஓடினார் இதற்கு என்ன பொருள் இதை எப்படி புரிந்து கொள்ளலாம் என்று கேட்டார். அந்த 87 வயது முதியவர் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார் அவர் அவர்களுக்கு அமைதியான ஆழமான ஒரு வழிகாட்டியாக இருந்தார்.
கீதனும் மெலடியும் கர்த்தருடன் நடக்க ஆரம்பித்தார்கள். இருவரிடமும் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து அவருடைய பழைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் ஏனென்றால் இருவரும் முன்பு இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்பவர்கள் இவர்கள் அங்கு இருந்தால் விருந்து கலைகட்டும். கீர்த்து இரவு நேர இசை நிகழ்ச்சிகளில் விடியற்காலை இரண்டு மணி வரை வாசித்துவிட்டு அடுத்த விருந்துக்கு போவார். இவர்களை சுற்றி இருந்தவரள் எல்லாம் இசைமைப்பாளர்கள் போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்கள் இரவு நேர பறவைகள். கீத் மெலடி ஆகிய இருவரும் இப்போது இவர்களுக்கு ஒரு புரியாத புதிராகி விட்டார்கள் ஏனென்றால் இவர்கள் இப்போது விருந்துகள் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வதில்லை. பாட்டு கச்சேரிக்கு போக மறுக்கிறார்கள். இவைகளை விட்டுவிட்டு வேதாகமத்தை தூக்கிக்கொண்டு 87 வயது சீன கிளவனோடு நேரம் செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது இவர்கள் ஏன் எப்படி ஆனார்கள் என்று பலர் குளம்பினார்கள். கீத் மெலடி இருவரும் விரைவில் ஞானஸ்நாானம் எடுத்தார்கள். இருவரும் தெய்வீக வைராக்கியத்தோடு கிறிஸ்துவை பின்தொடர ஆரம்பித்தார்கள். சத்தியத்தை தேடி உண்மையான தேவனை தேடி பல ஆண்டுகள் குளம்பி திரிந்த பின் இறுதியாக உண்மையான தேவனை கண்ட பேரானந்தம் அவருடைய உள்ளத்தை நிரப்பிற்று. எத்தனை தேடல்கள் குழப்பங்கள் கேள்விகள் சந்தேகங்கள் நீண்ட தேடலுக்கு பின் தாங்கள் கண்ட தேவனே அறிந்த சத்தியத்தை பிறருக்கு சொல்ல வேண்டும் என்ற வேட்கை பாரம் அவர்களை அழுத்தியது ஏனென்றால் பலர் தாங்கள் முன்பு சென்ற பாதையில் இன்னும் சுற்றி திரிகிறார்கள் என்று அவர்களுக்கு தெரியும். அவர்களை நோக்கி நிறுத்துங்கள் நான் கண்டுபிடித்து விட்டேன் இதுதான் சத்தியம் என்று உறக்க சொல்ல வேண்டும் என்ற பாரம். புதிய வாழ்க்கையின் சாட்சியும் பெயர் கிறிஸ்தவர்களும் அந்த உற்சாகத்தோடு பாரத்தோடு அவர் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார். அவர் சொன்னதை அவருடைய நண்பர்கள் பலர் ஏற்றுக்கொண்டார்கள் ஏனென்றால் அவர் சொன்னது உண்மை என்று அவர்களுக்கு தெரியும். இவன் எங்களை போன்றவன் இவன் சொல்கிறான் என்றால் அதை எங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று அவருடைய நண்பர்கள் சொன்னார்கள். கீர்த்தின் நேர்மை பின்புலம் அவர் சொன்ன நற்செய்திக்கு பக்க பலமாக இருந்தன. அநேகர் ஆண்டவராகிய இயேசுவை ஏற்று கொண்டார்கள்.
இருவரும் தங்கள் பழைய நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து நல்ல விருந்து கொடுத்து இயேசுவை அறிவித்தார்கள். இக்கட்டில் இருந்தவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்தவர்கள் நம்பிக்கையின் மேல் பசிதாகம் உடையவர்கள் சத்தியத்தை தேடியவர்கள் உள்ளம் உடைந்தவர்கள் இருளில் மூழ்கி இருந்தவர்கள் இப்படி வாழ்வில் நெருக்கடியில் இருந்தவர்கள் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். எல்லாரும் ஒருபுறம் அவர்கள் சொன்ன நற்செய்தியை கேட்டார்கள். இன்னொரு புறம் அவருடைய வாழ்க்கையை கண்டார்கள்.
ஒரு நாள் ஞாயுரு ஆராதனைக்கு பிறகு சில விசுவாசிகள் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் கீர்த்திடம் இன்று சாயங்காலம் ஒரு பாட்டி இருக்கிறது நாங்கள் போகிறோம் கீர்த்து நீங்களும் மெலடியும் வாருங்களேன் நன்றாக இருக்கும் என்று சொன்னார். சாயங்காலம் கீத்தும் மெலடியும் விருந்துக்கு சென்றார்கள். ஒரு வீட்டு கூட்டம் போல் தோன்றியது சபைக்கு வரக்கூடிய விசுவாசிகள் பலர் இருந்தார்கள். வீட்டில் நிறைய வேதாகமங்கள் இருந்தன பாடல் புத்தகங்கள் இருந்தன வந்திருந்த பல முகங்கள் மிகவும் பரிட்சியமானவை எல்லாம் நன்றாக தோன்றியது. ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்ததும் திடுக்கிட்டார்கள். அவருடைய முகத்தில் ஓங்கி அறைந்தால் போர்ந்தது. அங்கிருந்த காட்சிகள் அவர்கள் இருவரும் விட்டு வந்த பழைய உலகத்தை தூக்கி சாப்பிட்டு விழுங்கும் அளவுக்கு மோசமாக இருந்தது. பலவிதமான மதுவகைகள் பரிமாறப்பட்டன. போதை பொருட்கள் வழங்கப்பட்டன. சத்தமில்லாமல் நடக்கும் பாவங்கள். கீத அறை முழுவதும் நோட்டமிட்டார் அன்று காலையில் சபையில் தங்கள் அருகை அமர்ந்த பாடல் பாடியவர்கள் தேவனை ஆராதித்தவர்கள் தான் பின்பற்றத்தக்க மாதிரி என நினைத்த விசுவாசிகள் அங்கு இருந்தார்கள். கீர்த்தின் உள்ளம் நொறுங்கியது. இது என்ன ரட்டை வாழ்க்கை இது என்ன வெளிவேடம்? இது உண்மை விசுவாசம் இல்லை இவர்கள் விசுவாசிகள் இல்லை என்று அவர் எண்ணி கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை உதட்டால் பாடிவிட்டு திங்கள் முதல் சனி வரை பாவத்தில் வாழுகிற பெயர் கிறிஸ்தவர்களை கீர்த்து முதல் முறையாக பார்க்கிறார். இவர் சத்தியத்தை கேட்டிருக்கிறார்கள் தேவனை விசுவாசிப்பதாக கோறுகிறார்கள் ஆனால் இவர்கள் தேவனோடு விளையாடுகிறார்கள் என்ற வேதனை அவர் உள்ளத்தை வாட்டியது. ஞாயிர் என்று வழிபாடு ஆனாலும் திங்கள் முதல் சனி வரை பாவத்தில் நடப்பது இது நடிப்பு இது தேவனுக்கு செய்யும் துரோகம் என்று கீது உள்ளத்தில் கொதித்தார். அந்த விருந்து அவருக்கு ஒரு எச்சரிக்கை.
இந்த நேரத்தில் இன்னொரு காரியம் நடந்து கொண்டிருந்தது. நற்செய்தியை கேட்டு கிறிஸ்தவ ான கீர்த்தி நண்பர்கள் சிலர் சில மாதங்களுக்குள் போதை பொருட்கள் திருவாழ்க்கை பழைய பாவ வாழ்க்கை என மீண்டும் தங்கள் பழைய வழிகளுக்கு திரும்ப ஆரம்பித்தார்கள். பாறையின் மேல் விழுந்த விதைகளை போல் அவருடைய விசுவாசம் ஆழமாக வேர்விடவில்லை சீக்கிரம் முழைத்தது தற்காலிகமான.
மகிழ்ச்சி, அழுத்தங்களும் பிரச்சனைகளும் வந்தபோது செடி காய்ந்துவிட்டது. விரைவாக முளைத்து, சீக்கிரம் செத்துவிட்டது. கீத்தின் உள்ளம் உடைந்தது. கீத காரியங்களை புரிந்து கொள்ள தொடங்கினார். சபையில் நடப்பது என்ன? சமரசம். தேவனுக்காக பிரிந்த வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக உலகத்தாரை போலவே வாழ்கிறார்கள். காலத்திற்கு ஏற்றார் போல கோலம் போடுகிறார்கள். தேவனின் வழியை தேடவில்லை. தேவனுக்காக வாழவில்லை. சபைக்குள் உலகம் நுழைந்துவிட்டது. இதை இனம் காணும் மக்கள் அங்கு இல்லை என்று கீத அங்கலாய்த்தார்.
இந்த அனுபவம் கீப்தின் உள்ளத்தில் ஒரு புனிதமான வேதனையை உருவாக்கியது. ஒரு எழுச்சியை, ஒரு தீயை கொளுத்தியது. வீடு ஊழியத்தின் மையமானது. கீத், மெலடி இருவரும் பறந்த திறந்த மனதுடையவர்கள். கொடுப்பதற்கு தயங்காதவர்கள். அவர்கள் இருவரும் ஒருவர் எங்கள் வாழ்க்கை பாதையின் வழியாக கடந்து போகிறார் என்றால் அது தேவனுடைய செயல். அதற்கு காரணம் உண்டு என்ற எண்ணம் உடையவர்கள்.
ஒரு நாள் மெலடி ஒரு கடக்கரையில் நடந்து கொண்டிருந்த போது ஒரு இளம்பெண் அங்கிருந்த படிக்கட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்தான். மெலடி அவர் அருகே போய் உட்கார்ந்து என்னம்மா விஷயம் என்று ஆறுதலோடு கேட்டார். அந்த பெண் கற்பமாக இருந்தார். அந்த பெண் நான் வீடற்றவள். போக்கிடமும் புகழிடமும் இல்லாதவள். நான் கருவை கலைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். வாழ வழி இல்லை. கவனிக்க ஆளில்லை என்று சொல்லி அழுதார்.
மெலடி அவரிடம் நிதானமாக பேசினார். பிறகு போய் கீத்த அழைத்துக் கொண்டு வந்தார். கீத்து சில நிமிடங்கள் அந்த பெண் பேசுவதை கேட்டான். பிறகு எங்க வீட்ல ஒரு அரை காலியா இருக்கு. நீங்க விரும்புனா எங்க வீட்டுக்கு வந்து எங்களோட தங்கலாம் என்று சொன்னார். மெலடி கொஞ்சம் அதிர்ந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பெண் யார் என்று கூட தெரியாது. இதற்கு முன் பார்த்ததே இல்லை. திடுதுப்பென்று வீட்டுக்கு கூட்டி கொண்டு வந்து வீட்டில் தங்க சொல்கிறாரே என்ற எண்ணம் வந்தது. ஆனால் உடனே இல்லை வரட்டும் தங்கட்டும். ஆமா வீட்டில் ஒரு கூடுதலே சும்மாதான் இருக்கிறது என்று அவரும் நினைத்தார்.
அந்த பெண்ணும் சம்மதித்தார். அவர் அவர்களோடு போய் அந்த அறையில் தங்கினார். அந்த வீட்டின் அன்பும் அவருடைய வாழ்க்கையும் தேவனுடைய சாட்சியை அந்த பெண்ணுக்கு காண்பித்தது. அவர் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசியானார். தேவனுடைய பிள்ளையாக மாறினார். அல்லேலூயா.
கீத, மெலடி இருவரும் புதிய மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் ஒரு பெண்ணை சந்தித்தார்கள். அந்த பெண் சமீபத்தில் தான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருந்தார். அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில்தான் கீத கச்சேரிகள் நடத்தினார். இசைக்கருவிகள் வாசித்தார். அந்த பெண்ணுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை. கணவன் இல்லை. இரவில் வெகுநேரம் வேலை செய்ய வேண்டி இருந்தது. மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார். அவளுடைய சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உலக பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் அது பாதுகாப்பானது அல்ல என்று கீர்த்தி தெளிவாக தெரிந்தது.
இதை உணர்ந்த கீத கொஞ்சம் கூட யோசிக்காமல் மெலடியை பார்த்து நம்ம வீட்டில இன்னொரு அறை காலியா இருக்குது. இவரும் இவருடைய குழந்தைகளும் நம்ம வீட்டில வந்து தங்கினால் என்ன என்று கேட்டார். அவளும் அவளுடைய மகளும் அவருடைய வீட்டில் குடியேறினார்கள். அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் வார்த்தைகளிலும் இசையிலும் மட்டுமல்ல. அது அவருடைய அன்றாட வாழ்விலும் தெளிவாக தெரிந்தது. அவர் மேடையில் பாடியதை அவருடைய வீட்டிலும் வாழ்ந்தார். அவருடைய இசையையும் வாழ்க்கையை வேறுபடுத்த முடியாது. அவர் வாழ்ந்த வீட்டில் இசை மட்டுமல்லை கிறிஸ்துவும் வாழ்ந்தார்.
கீத், மெலடி இருவரும் தங்களுடைய வீட்டின் கார் நிறுத்தும் இடத்தை கராஜ் தனித்தனி அறைகளாக மாற்றினார்கள். தங்க இடமில்லாத புதிய விசுவாசிகள். பழைய பழக்கங்களிருந்து தப்பித்து புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என விரும்பியவர்கள். பரிகாச சூழ்நிலை விட்டு விலக விரும்பியவர்கள். ஆவிக்குரிய வாழ்வில் வளர ஆரோக்கியமான சூழலை விரும்பியவர்கள். அந்த வீட்டை நாடி ார்கள். அவருடைய வீட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் சாப்பிட்டார்கள். ஊழியக்காரர்கள் தங்கினார்கள். துக்கத்தில் இருந்தவர்கள் ஓய்வு கண்டார்கள். அவருடைய வீடு எப்போது நிரம்பி வழிந்தது. மக்கள் வந்து போய்க்கொண்டே இருந்தார்கள். அங்கு ஜீவன், அன்பு, நற்செய்தி பாய்ந்தோடின. பணிகள் செய்யவும் மனிதர்களை வரவேற்கவும் தேவனின் அன்பை காட்டவும் அவருடைய வீடு எப்போதும் திறந்திருந்தது. அவருடைய வீடு தேவனுடைய அன்பை பகிர்ந்தளிக்கும் பரிசுத்தத்தின் கூடாரமாயிற்று. முடங்கி போனவர்களும் வீதியில் வாழும் இளைஞர்களும் மதத்தின் மேல் விரக்தி அடைந்தவர்களும் அவருடைய வீட்டை தேடி வந்தார்கள். கீத்தும் மெலடியும் அவர்களுக்கு அன்பின் உணவு பரிமாறி இயேசுவின் அன்பை வார்த்தைகளால் அல்ல வாழ்க்கையால் காட்டினார்கள்.
அவருடைய வீடு ஒரு சராசரி வீடு அல்ல. அது பலருக்கு ஒரு தங்குமிடம். ஒரு விசுவாச பயணத்தின் அடையாளம். மெலடியின் சாந்தம், ஆழமான விசுவாசம், ஈடுபாடு, தியாகம் அந்த குடும்பத்தை காத்தது. எனவே அது வெறுமனே ஒரு தங்குமிடம் மட்டுமல்ல. அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கான வீடாக மாறியது. ஒரு புனிதமான ஊழிய மையமாக மாறியது.
அவர்களை பார்த்த மற்ற விசுவாசிகள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். ஆச்சரியப்பட்டார் என்று சொல்வதை விட அவர்கள் இருவரும் பைத்தியம் என்று சொன்னார்கள். நீங்கள் எப்படி இவைகளை செய்கிறீர்கள்? இது புத்திசாலித்தனம் அல்ல. உங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. உங்கள் வீட்டில் இத்தனை பேரா என்று கிண்டலாக பேசினார்கள். ஆனால் இதுவே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்று கீர்த்துக்கும் மெலடிக்கும் தெரிந்தது. அவருடைய வாழ்க்கை அன்பான மனைவி, அன்பான கணவன் என்ற வட்டத்தை கடந்தது. அது ஒரு ஆவிக்குரிய சகோதரத்துவம், பங்களிப்பு, ஈடுபாடு, அழைப்பு.
நான் ஏன் ஜீவனை பெற்றோம் என்ற கேள்விக்கு இருவரும் ஒரே பதில் தான் வைத்திருந்தார்கள். இயேசுவுக்காக சாட்சியாக வாழ நம்மை ஏற்படுத்தினார் என்பதுதான் அவருடைய பதில். இவர்கள் இதுவரை ஒரு குழந்தையை கூட பெறவில்லை வளர்க்கவில்லை. ஆனால் வீடு முழுவதும் ஆட்கள் இவர்கள் அவர்களை வளர்த்தார்கள். பிறர் என்ன நினைத்தார்கள் என்பதை பற்றி கீத்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்துக்காக வாழ வேண்டும் வளர வேண்டும். அதற்காக அவர்களை கட்டி எழுப்ப வேண்டும் பாரம் அவரை அழுத்தியது. அந்த அனல் அவருக்குள் எரிந்தது. அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார்.
ஒருவருக்கு ஒதுங்குவதற்கு இடம் வேண்டுமா கொடுத்தார். துன்மார்க்கமான நண்பரிடமிருந்து விலகியிருந்து சத்தியத்தை கற்றுக்கொள்ள வேண்டுமா அப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுத்தார். நாட்கள் செல்ல செல்ல அவருடைய வீட்டில் வந்து தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது. எனவே அவர்கள் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள். ஆம், சிலர் அவருடைய நற்குணத்தை தவறாக பயன்படுத்தினார்கள். உண்மையில்லாத சிலர் திருடவும் செய்தார்கள். ஆயினும் கீத், மெலடி இருவரும் அதை ஒரு பொருட்டாக கருதவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த வீட்டில் இருந்த பெரும்பாலானவர்கள் கீர்த்தும் மெலடியும் கொடுத்த ஊக்கத்தால் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். கிறிஸ்துவில் வளர்ந்தார்கள். அவருடைய வாழ்க்கை மாற தொடங்கியது.
கீர்த்து வாரந்தோறும் வேதாகம பாடம் நடத்தினார். வேதாகமத்தில்ிருந்து போதித்தார். ஆலோசனை கேட்டவர்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் ஆலோசனை கூறினார். இரவு நேரங்களில் அவரோடு சேர்ந்து ஜெபித்தார். வளர்ந்த, முதிர்ந்த, தேரிய பரிசுத்தவான்கள் அழைத்து வந்து அவர்களுக்கு போதித்தார். சேர்ந்து சாப்பிட்டார்கள். பாடினார்கள். இப்படி அந்த வீடு பலருக்கு ஒரு அடைக்கல பட்டணம்.
இவைகளுக்குிடையிலும் கீத தன் இசை பயணத்தை நிறுத்தவில்லை. ஆயினும் அதை குறித்த ஒரு குழப்பம் அவருடைய உள்ளத்தில் நிலவியது. தேவன் தனக்கு இசை என்ற ஒரு கொடையை தந்திருக்கிறார் என்று கீத்துக்கு நன்றாக தெரியும். ஆனால் அதை தான் எந்த வழியில் பயன்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பவருக்கு தெரியவில்லை. நான் என் இசையையும் பாடல்களையும் அவிசுவாசிகளுக்காக பயன்படுத்த போகிறேன். என் இசையின் மூலம் நான் அவர்களின் தேவனிடம் கொண்டுவர வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் நினைத்தார். ஆனாலும் மனதில் தெளிவில்லை.
தேவனுடைய சித்தத்தை தெளிவாக தெரிந்து கொள்வதற்காக அவர் உபவாசித்து ஜெபிக்க ஆரம்பித்தார். ஆம், உன் இசையை நான் பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால் அவிசுவாசிகளுக்காக அல்ல. உலகத்துக்காக அல்ல. என் மக்களுக்காக என்று தேவன் பேசினார். அவர் தேவனுடைய இருதயத்தை தெளிவாக தெரிந்து கொண்டார். அதாவது தேவன் கீர்த்தியின் கண்களை ஒரு பெரிய சத்தியத்துக்கு திறந்திருந்தார். சபைகளில் அநேகர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறினார்கள். தேவனை அறிந்ததாக சொன்னார்கள். ஆனால் கிறிஸ்துவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எனவே கீர்த்தின் இசையின் திசை மாறியது. அது ஒரு பொழுது போக்குக்காகவோ மக்களை மகிழ்விப்பதற்காகவோ காதுக்கு இன்பமாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ பாடவில்லை. அவருடைய பாடல்கள் தாலாட்டு இல்லை. சபையில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புவதற்காக. விசுவாசிகளை கட்டி எழுப்புவதற்காக. ஆவிக்குரிய மந்தத்தை மாற்றுவதற்காக அவர் பாடினார்.
கீர்த் விரைவில் சில இசை ஆல்பங்களை வெளியிட தொடங்கினார். ஸ்பேரோ ரெக்கார்ட்ஸ் என்ற ஒரு கிறிஸ்தவ இசை நிறுவனம் "ஹூஸ்ஹயர் கேட்க காதுள்ளவன் கேட்க கடவன்" என்ற அவருடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டது. அதன்பின் அவர் நகரங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று கிறிஸ்தவ பாடல்கள் பாடினார். ஆரம்பத்தில் பெரியதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் மெல்ல மெல்ல அவருடைய பாடல்கள் மக்களை சென்றடைந்தன. ஒருமுறை அவர் ஒரு மாநிலத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்றார். ஆயிரக்கணக்கான னவர் கலந்து கொண்டார்கள். ஆனால் அவர் பேசிய நற்செய்தியை கேட்டு ஒரே ஒருவர் தான் இரட்சிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் அவர் உங்கள் ஒருவருக்காகவே நான் இந்த ஊருக்கு வந்தேன். கர்த்தர் என்னை இங்கு கொண்டு வந்தார் என்று சொன்னார்.
கீர்த் இரட்சிக்கப்படுவதற்கு முன் புகழுக்காக வாழ்ந்தார். மேடைகளை தேடினார். நட்சத்திரமாக மின்ன வேண்டும் என்று ஏங்கினார். ஆனால் இப்போது அவரே இசையால்பம் வெளியிடுகிறார். சுற்று பயணங்கள் செய்கிறார். மேடைகள் அமைக்கிறார். அவருக்கு ரசிகர்கள் விசிரிகள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அவர் பேரும் புகழும் தேடவில்லை. ஆத்துமாக்களை தேடினார். இரட்சிக்கப்பட்டவர்களையும் பரிசுத்தத்தை தேடினார். இசையின் மூலம் கிடைத்த மொத்த வருமானத்தையும் ஊழியத்துக்கு செலவு செய்தார். ஏற்கனவே அவருடைய வீட்டில் நிறைய ஆட்கள் தங்கி இருந்தார்கள். அது போதாது என்று இப்போது இன்னும் கூடுதலாக இரண்டு வீடுகளை வாங்கினார்கள். ஐந்து வீடுகளை வாடைக்கு எடுத்தார்கள். அந்த பகுதியில் அவர்கள் வாழ்ந்த தெரு ஒரு சிறிய மினிஸ்ட்ரி பூங்கா போல் மாறியது. சிதைந்த பலருடைய வாழ்க்கையை செம்மையாக்கினார்கள். தங்கள் வாழ்க்கையில் கடந்து சென்ற தேவையில் இருந்த மக்களை எல்லாம் கூட்டி வந்து பராமரித்தார்கள். முடிந்தவரை அவர்களை உள்ளாகவும் வெளியாகவும் ஊக்குவித்தார்கள். இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். ஆவிக்குரிய முதிர்ச்சி அடைந்த பரிசுத்தவான்கள் இவர்களுக்கு உதவினார்கள். இது ஓர் இசைக்காஞனின் வாழ்க்கை அல்ல. இது ஓர் ஆவிக்குரிய விளக்கின் சாட்சி.
கீர்த்தின் இரண்டாவது ஆல்பம் "நோ காம்ப்ரமைஸ்" சமரசம் இல்லை. அந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த சில பாடல்கள் சிலருக்கு மிகவும் நெருடலாக இருந்தன. அந்த அளவுக்கு பாடல் வரிகள் கூர்மையாக இருந்தன. அவர் அமெரிக்காவின் பல பகுதிகளில் பல்வேறு சபைகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தினார். அவர் இசைக்கருவிகளை வாசித்ததோடு பாடல்கள் பாடியதோடு இருத்தவட இடையிடையே தேவனுடைய செய்திகளை பேசினார். விசுவாசிகள் விழித்தொழ வேண்டும் உணர்வடைய வேண்டும் என்பதுதான் அவருடைய முக்கியமான செய்தி. உலகம் அழிகிறதே நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு பாடல் கதறுகிறது. "தவர்ஸ்லீப்பிங் இதடாத just கைட் பecாஸ் இஸ் இ theலைஹ கய ப soோ deட whenன்ய சோவல்ட்" உலகம் இருளில் உறங்கி கொண்டிருக்கிறது. சபையால் அதை எதிர்க்க முடியவில்லை. ஏனென்றால் அது ஒளியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. நீ இவ்வளவு நன்றாக சாப்பிட்ட போது உன்னால் எப்படி இப்படி செத்தவன் போல் இருக்க முடிகிறது. இதுவே அவருடைய பாடல்களின் கருப்பொருள். இதுவே விசுவாசிகளை விழித்தெழுப்ப அவர் விடுத்த அழைப்பு.
இயேசுவை உண்மையாக சந்தித்த பிறகு அவர் வெறுமனே பாடுவதற்காக வாழவில்லை. பாடல்களின் மூலமாக இயேசுவை பிறருக்கு வழங்குவதற்காக வாழ தொடங்கினார். இப்போது இயேசுவே அவருடைய வாழ்வின் மையமாக மாறினார். முன்பு மெல்லிய பாப்பிசை, காதல், பாசம், தேடல் என்பவை அவருடைய பாடல்களின் கருப்பொருள். அவரில் ஏற்பட்ட மாற்றத்திக்கு ஏற்ப அவருடைய இசையிலும் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இப்போது வாழ்க்கை, பாவம், பரிசுத்தம், விசுவாசம், சபை என்பவைதான் அவருடைய பாடுகளின் உள்ளடக்கம். அவருடைய பாடுகளில் ஒவ்வொருவரையும் பாவத்தை கண்டிக்கிறது. சபைக்கு சவால் விடுகிறது. பரிசுத்த வாழ்வுக்கு அழைப்பு விடுகிறது. இப்போது அவர் ஒரு இசைக்களைஞாக மட்டுமல்ல அவர் ஒரு சாட்சியாகவும் சிந்திக்க வைக்கும் தீர்க்கதரிசியாகவும் ஆழமான பாரத்தோடு வாழும் ஒரு மனிதனாகவும் மாறினார். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அன்பையும் சமாதானத்தையும் அமைதியையும் பற்றி பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் கித கிரீன் பாவத்தை கேள்வி கேட்கும் பாடல்களை ஏற்றினார்.
அவருடைய பாடல்களின் தன்மையை பற்றி சொல்வதற்கு நான் சில பாடல்களை எடுத்துக்காட்டாக சொல்கிறேன். "பே இஸ் பெட்டர்தன்சாக்ரிபைஸ்" பலிகளை விட கீழ்படிதலே மேலானது என்ற பாடல் நெஞ்சில் ஓங்கி குத்துகிறது. "நீங்கள் நீங்கள் இயேசுவுக்காக வாழவில்லையே" என்று ஒரு மற்றொரு பாடல் தவிக்கிறது. கேள்வி எழுப்புகிறது. அங்கலாக்கிறது. "ஓலார்ட் யூஆர் பியூட்டிபுல்யவர் பேஸ் இஸ்ஆல்ஐ" ஆண்டவரே நீர் அழகு மிகுந்தவர் உம் முகமே என் ஆசை என் தேடல். அவர் பாடிய பாடல்கள் வெறும் மென்மையான இசை அல்ல. அவை விசாரணைகள், எச்சரிக்கைகள், மனதை கிள்ளும் அழைப்புகள். அவை உள்ளத்தை கிளர்கின்றன. வாழ்க்கையை மாற்ற அழைக்கின்றன. கீர்த்தி பாடல்களை கேட்கும்போது நம்மால் சில நேரங்களில் அழ முடியாமல் போய்விடும். அந்த வரிகள் அந்த குரல் எதையோ இழந்தது போல் தோன்றும். ஆனால் அவர் நீங்கள் என்னை போல் இல்லாமல் இயேசுவுக்காக தீயாய் எறிய வேண்டும் எரிய முடியும் என்று கூறினார்.
கீத்தின் பாடல்களையும் இசை கட்சிகளை பற்றி நிறைய பேசலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன். ஒரு தடவை கீத கிரீன் அமெரிக்காவின் ஆரகன் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒரு பெரிய கிறிஸ்தவ இசை விழாவிற்கு அழைக்கப்பட்டார். இது சாதாரணமான விழா அல்ல. பத்தாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் விழா. அந்த வருடம் இது இன்னும் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் சுமார் 20ஆயிரம் பேர் வந்திருந்தார்கள். கடைசி நாளில் கீத்கின் பாடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் அந்த எண்ணிக்கை 35ஆயிரத்தை எட்டியது. அந்த நேரத்தில் கீர்த்தின் பல ஆல்பங்கள் மிக பிரபலமாக இருந்தன. அவர் அமெரிக்காவின் மிகப்பெரிய கிறிஸ்தவ இசைக்கலைஞர் ஒருவராக மதிக்கப்பட்டார்.
அந்த விழாவில் பரவசம், மகிழ்ச்சி, உற்சாகம், பாடல்கள், ஆரவாரம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். கூட்டத்தில் பலர் பேசினார்கள். நியூசிலாந்தை சேர்ந்த விங்கி பிராட்னி என்ற பிரசங்கியாரும் அங்கே பேசினார். ஆனால் அங்கு ஏதோ ஒன்று இல்லாதது போல் இருந்தது. கீத்கிரியனுக்கு உறுத்தலாக இருந்தது. அவர் மகிழ்ச்சியாக இல்லை. அவர் அங்கு மிகவும் கவலையுடன் உட்கார்ந்திருந்தார். சுற்றி பார்த்தார். 35ஆயிரம் கிறிஸ்தவர்கள். இது தேவனுடைய பெயரில் நடக்கும் ஒரு பெரிய கூத்து அவ்வளவுதான். எங்கு தேவன் இல்லை என்று அவருடைய உள்ளம் கூறிற்று. அவருடைய உள்ளம் வலித்தது. ஒரு 35ஆயிரம் வாலிப விசுவாசிகளின் கூட்டத்தை பார்த்தார். பாடல்கள் இருக்கின்றன. பரவசம் இருக்கிறது. ஆனால் மனம்திரும்புதல் இல்லையே. கைகள் உயர்கின்றன. ஆனால் இருதயங்கள் தொடப்படவில்லையே என்று அங்கலாய்தார்.
விங்கி பிராட்னினுக்கும் அந்த உணர்வு வந்தது. அவர் பேசிய போதும் கூட்டத்தில்ிருந்து எந்த மறுமொழியும் இல்லை. மகிழ்ச்சி இருந்தது. ஆனால் மனந்ததிரும்புதல் இல்லை. மறுமொழி இல்லை. அந்த பெருவிழாவின் கடைசி நாள் ஒரு இளம்பெண் விக்கி பிராட்னி தங்கியிருந்த அறையின் கதவை தட்டினார். அவருடைய கண்களில் கண்ணீர். தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். நான் ஜெபக்கூடாரத்தில் ஒரு ஆலோசகர் என்று தன்னை அறிமுகம் செய்தார். கூட்டங்கள் முடிந்தவன் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த கூடாரங்களுக்கு செல்வார்கள். அங்கு இருப்பவர்கள் அவர்களுக்கு உரிய ஆலோசனை அளித்து அவர்களை வழிநடத்துவார்கள். ஜெபிப்பார்கள். இவர் அப்படிப்பட்ட ஒரு ஆலோசகர். இங்கு ஏதோ சரியில்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் யாருமே தேவனிடத்தில் வரவில்லை. யாரும் மனந்திரும்பவில்லை. இசையும் உற்சாகமும் தான் இங்கு இருக்கிறது என்று அவர் சொன்னார்.
பின்னர் அவர் விங்கியிடம் ஒரு துண்டு தாளை கொடுத்து தேவன் என்னிடம் இந்த வேதாகம வசனத்தை கொடுத்தார். அவசரம் இன்னும் ஒரு நாள் கூட்டம் தான் இருக்கிறது என்று சொன்னார். அந்த நேரத்தில் கீத்தின் உள்ளத்தில் ஒரு பெரிய பாரம் எழுத்தியது. அன்று இரவு அவர் 35000 வாலிப முன்னிலையில் மேடையில் பாட போகிறார். இசைக்கருவிகள் வாசிக்க போகிறார். பேச போகிறார். என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் அவருக்கு தெளிவ க தெரிந்தது. இந்த வாலிபர்கள் ஆலயத்துக்கு செல்கிறார்கள். பாடல்கள் பாடுகிறார்கள். கைகளை உயர்த்துகிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் கிறிஸ்தவர்களாக வாழவில்லை. இவர்கள் வாயால் கிறிஸ்தவர்கள் வாழ்க்கையில் சாட்சிகள் இல்லை என்று தெரிந்தது. என்ன பேசுவது எப்படி பேசுவது என்று தெரியவில்லை. அதனால் அவர் தேவனுக்கு முன் போனார். கதறினார். கிருபை தந்த தேவனே ஏதோ ஒன்றை செய்யும். என்ன சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. இந்த தருணத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. எனக்கு ஒரு வார்த்தை தாரும். 35ஆயிரம் வாலிபர்கள் இதோ இங்கு உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஜெபித்தார்.
அந்த நேரத்தில் அவருடைய அறை கதவை தட்டும் சத்தம் கேட்டது. விங்கி உள்ளே வந்தார். மடித்த ஒரு தாளை அவர் கீத்திடம் கொடுத்து இதோ இது உனக்குரியது என்று சொல்லி கொடுத்துவிட்டு சென்றார். அந்த இரவு கீத் மேடைக்கு வந்தபோது கூட்டம் ஆரவாரித்தது.
பரவசம், கைதட்டல், கூச்சல் சத்தம். ஆனால் கீத் ஒரு நிமிடம் கூட இவைகளை கவனிக்கவில்லை. நேரே பியானோவுக்கு முன் அமர்ந்தார். அமைதி. அவர் எந்த அறிமுகமும், கையசைப்பும் இல்லாமல் அந்த சிறு தாளை திறந்து வாசித்தார். அது ஆமோஸ் புத்தகத்திலிருந்து சில வசனங்கள்.
இதோ அந்த வசனங்கள்: "உங்கள் பண்டிகைகளை பகைத்து வெறுக்கிறேன். உங்கள் ஆசிரிப்பு நாட்களில் எனக்கு பிரியமில்லை. உங்கள் தகன பலிகளையும் போஜன பலிகளையும் எனக்கு படைத்தாலும் நான் அங்கீகரிக்க மாட்டேன். கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திர பலிகளையும் நான் நோக்கி பார்க்க மாட்டேன். உன் பாட்டுக்களின் இறைச்சலை என்னை விட்டு அகற்று. உன் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். நியாயம் தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டு வரக்கடவது."
இது வெறும் சத்தம் அல்ல. இது ஒரு அவசர அழைப்பு. இந்த வசனங்களை வாசித்து முடித்த பின் அங்கு நிலைமை மாறிற்று. நீங்கள் இயேசுவை உங்கள் வாழ்வில் வரவேற்றதாக சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் இல்லை எனில், அறிவுரிகள், அடையாளங்கள் இல்லையெனில் அது உண்மையா? உங்கள் அயலகத்தார், உங்கள் நண்பர்கள், உங்கள் பெற்றோர்கள், உங்களோடு சேர்ந்து படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் அதை பார்க்கிறார்களா? வார இறுதியில் உங்கள் வாயினால் தேவனை துதிக்கிறீர்கள். ஆனால் வாரம் முழுவதும் உலக மக்களை போல் உலகத்தோடு கைகோர்த்து நடக்கிறீர்கள் என்றால் நீங்கள் சத்தியத்தை தவற விட்டு விட்டீர்கள். உங்களில் ஏதோ ஒன்று மிக தவறாக இருக்கிறது. ஒரு நாள் தேவன் உங்களை பார்த்து "நான் உங்களை அறியேன்" என்று சொல்லக்கூடும் என்று கீத் பேசினார். அவர் பேசிய போது குரலில் அழுத்தமும் நடுக்கமும் இருந்தன. அவர் எதையும் பூசி மழுகி பேசவில்லை. மென்மையாக தடவி கொடுக்கவும் இல்லை. அவர்கள் கூச்சலிட்டார்களா, கைதட்டினார்களா என்பதை பற்றி கவலைப்படவும் இல்லை.
இவர்கள் கீத்தை மேடையில் இருந்து தள்ளிவிட்டு விடுவார்களோ? இவர் ஏன் இவ்வளவு கடுமையாக பேசுகிறார் என்று மெலடி பயந்தார். ஆனால் கீத் எதை பற்றியும் கவலைப்படவில்லை. அந்த இரவு அற்புதம் நிகழ்ந்தது. அவருடைய அவசர அழைப்பு அர்த்தமுள்ள அழைப்பாக மாறியது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் எழுந்தார்கள். இசைக்கு நடனம் ஆடுவதற்காக அல்ல, தங்களை தேவனுக்கு ஒப்பு கொடுப்பதற்காக. உண்மையை உணர்ந்தார்கள். தாங்கள் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் என அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் அதுவரை தேவனை அறிந்ததே இல்லை. அந்த இரவு ஆயிரக்கணக்கான உள்ளங்கள் இயேசுவுக்காக முற்றிலும் உடைந்தன. அரங்கம் காலியான பிறகும், மேடைகளை தூக்கி கொண்டு போன பிறகும் பல வாலிபர்கள் அங்கே இருந்தார்கள். தரையில் முழங்காலில் ஜெபித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். ஆம், ஆண்டவர் அங்கு செயலாற்றினார். ஏனென்றால் ஒரு மனிதன், ஒரே ஒரு மனிதன் 35,000 பேரின் முன்னிலையில் நிமிர்ந்து நின்று தன் இருதயத்தில் இருந்த தேவனுடைய வார்த்தையை தைரியமாக சொன்னான். "உங்கள் இருதயத்தை நீங்கள் தேவனுக்கு கொடுக்கவில்லை என்றால் உங்கள் திருவிழாக்களை தேவன் வெறுக்கிறார்" என்ற வார்த்தைகளை கூறியபோது அவர் அதன் பொருளை உணர்ந்து சொன்னார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவர் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து வந்தவை.
கீத் கிரீன் தொடர்ந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய உள்ளத்தில், "இசை என்னுடையது இல்லை. இது தேவன் எனக்கு தந்த பரிசு. இது தேவனுடைய பணிக்காகவே. நற்செய்தி அறிவிப்பதற்காகவே. சபையை தட்டி எழுப்புவதற்காகவே. விசுவாசிகளை கட்டி எழுப்புவதற்காகவே. மக்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருவதற்காகவே. புகழுக்காகவோ பணத்துக்காகவோ அல்ல" என்ற ஒரு ஆழ்ந்த இயக்கம் ஏற்பட்டது. அவருடைய ஊழியத்தின் ஒரு பெரிய அடையாளம் அவருடைய ஒலிநாடா வினியோகம். அந்த காலத்தில் பாடல்களின் ஒலிநாடாக்கள் விற்பனை செய்யப்பட்டன. விரும்பியவர்கள் விலை கொடுத்துதான் வாங்கினார்கள். அப்போது அவருக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒருவன் இயேசுவை அறிய விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் என் இசை ஆல்பத்தை வாங்க அவனிடம் பணம் இல்லை என்றால் அவன் என்ன செய்வான்? அப்படியானால் நான் என் இசையை விற்கலாமா? கூடாது. தேவன் எனக்கு தந்த இந்த நற்செய்தியை நான் எப்படி விற்கலாம் என்ற எண்ணம் அவருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது.
அவர் ஒரு அதிரடியான முடிவெடுத்தார். இதுவரை அவர் தன் இசை ஆல்பங்களை ஸ்பேரோ ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார். ஏனென்றால் அவர்களுடன் அவர் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த ஒப்பந்தத்தை அவர் உடனடியாக ரத்து செய்தார். அதன்பின் அவர் தன் சொந்த செலவில் தன் ஆல்பங்களை வெளியிட தொடங்கினார். ஆனால் அவர் தன் ஆல்பங்களை அதன் பிறகு விலைக்கு விற்கவில்லை. "Don't pay for this cassette, unless you want to." இயேசுவின் செய்தியை கேட்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பது அவருடைய கோட்பாடு. "The gospel is free, so why should music bearing the gospel not be free?" நற்செய்தி இலவசம் என்றால் நற்செய்தியை கொண்டு செல்லும் இசை ஏன் இலவசமாக இருக்கக்கூடாது? அதை ஏன் விற்க வேண்டும் என்று அவர் கேட்டார். எனவே அவர் பாடல் ஒலிநாடாக்களை இலவசமாக வினியோகித்தார். தேவன் உங்களை ஏவினால் கொடுங்கள் என்று மட்டுமே கூறினார். "உங்களால் முடிந்தால் கொடுங்கள். என்ன முடியுமோ கொடுங்கள். முடியாவிட்டால் இலவசமாக எடுத்துக் கொள்ளுங்கள். நற்செய்தி விற்பனைக்கு அல்ல" என்று சொன்னார். அந்த நேரத்தில் இது ஒரு புரட்சிகரமான செயல். அவர்களை வினியோகித்த பாடல் ஒலிநாடாக்கள் பலர் இயேசுவை அறிய ஒரு வாசலானது. அவருடைய முடிவை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள். அவருடைய இசை நிகழ்ச்சிக்கு பிறகு சிலர் ஓடோடி போய் பல ஆல்பங்களை அள்ளிக்கொண்டு போனார்கள். ஆனால் கீத் அதை பற்றி கவலைப்படவே இல்லை. அவர்கள் பாடல்களை கேட்க வேண்டும். அதன் மூலம் நற்செய்தி போக வேண்டும். அது போதும் என்பதே அவருடைய நிலைப்பாடு. ஒவ்வொருவரும் நற்செய்தியை கேட்க வேண்டும். ஒவ்வொருவரும் நற்செய்தியை கேட்க தகுதியானவர்கள். அது போதும் என்பதில் கீத் உறுதியாக இருந்தார். இதனால் அவருக்கு ஒருபோதும் பற்றாக்குறை ஏற்படவில்லை. ஏனென்றால் இது தேவனுடைய மகிமைக்கான இசை. தன்னுடைய புகழுக்கான இசை அல்ல. அந்த நேரத்தில் இதுபோல் செய்தவர் அவரை தவிர வேறு யாருமில்லை. இலவச இசை நிகழ்ச்சிகள், இலவச ஆல்பங்கள், புகழுக்கு எதிராக நின்ற வாழ்வு. இவை அனைத்தும் அந்த காலத்தில் யாரும் சிந்திக்காத, செய்வதற்கு தயங்கிய காரியங்கள். பல கிறிஸ்தவ இசைக்கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சிலர் அதை கடுமையாக விமர்சித்தார்கள். "இப்படியா ஊழியம் செய்வது?" என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் கீத் அதை பற்றி கவலைப்படவில்லை.
அவர் பாடிய ஒவ்வொரு வரியும் நம்மை பரீட்சிக்கிறது. எடுத்துக்காட்டாக, "நாம் யாருக்காக வாழ்கிறோம்?" இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்? ஹாலிவுட் இசை உலகம் அவரை வரவேற்க தயாராக இருந்தது. பேர், புகழ், பணம், பாராட்டு குவிந்தன. இயேசுவை சந்தித்த பின் தன் வாழ்க்கையின் நோக்கத்தை முற்றிலும் மாற்றினார். உலக மதிப்பீடுகளை துறந்து இயேசுவின் திருப்தியை மட்டுமே தேடினார். உண்மையான விசுவாசத்திற்காக இயேசுவுக்காக ஒரு புனித வாழ்க்கையின் பாதையில் நடக்க தீர்மானித்தார். வெற்றியை குறித்து அவர் இவ்வாறு எழுதினார்: "Success is not measured by money, but by God's success as obedience." உலகம் புகழிலும் பணத்திலும் வெற்றியை காண்கிறது. ஆனால் தேவன் கீழ்படிதலிலும் உண்மையிலும் வெற்றியை காண்கிறார். உலகம் வெற்றியை எப்படி நிர்ணயிக்கிறது? புகழ், பணம், செல்வாக்கு, மேடையில் கிடைக்கும் கைதட்டுதல், கூட்டம், விளம்பரம். அதுதான் வெற்றி என உலகம் சொல்கிறது. ஆனால் தேவனின் பார்வை வேறு. அர்ப்பணமும் கீழ்படிதலும் வெற்றியின் பொருள். ஒரு மனம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படுகிறதா? ஒரு வாழ்க்கை தேவனுக்கு சொந்தமாய் வாழ்கிறதா? இதுவே உண்மையான வெற்றி என்று அவர் கூறினார்.
கீத், மெலடி இருவரும் சேர்ந்து "Last Days Newsletter" என ஒரு சிறிய மாத இதழையும் ஆரம்பித்தார்கள். கீத், மெலடி ஆகிய இருவருக்கும் அப்போது வயது 20 தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆகவே தங்கள் வயதுடையவர்களுக்கு ஏற்றவாறு அப்போதைய பிரச்சினைகளை குறித்து வேதாகமத்தின் கண்ணோட்டத்தை எழுதினார்கள். அதில் கீத் எழுதிய "உள்ளதை உள்ளபடி செல்லும் கட்டுரைகள்", "சந்தித்த சோதனைகள்", "பாசத்தோடு எச்சரிக்கைகள்", "அன்பான உற்சாகமூட்டும் வார்த்தைகள்" இடம்பெற்றன. எல்லாவற்றையும் அன்போடும் சத்தியத்தோடும் வெளிப்படையாக செய்தார்கள். மாத இதழில் இடம்பெற்ற "நீங்கள் நம் காலத்தில் தேவனுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா?" என்ற போது வந்த பல கேள்விகள் பலருடைய தூக்கத்தை கெடுத்தன. கீத், மெலடி இருவரும் கிறிஸ்தவ உலகத்தின் மென்மையான போக்குக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். பெரிய ஆலயங்களின் மென்மையான போக்கையும், நடிப்பையும், போலித்தனமான விசுவாசத்தையும் இருவரும் அம்பலப்படுத்தினார்கள். "Why is Christianity so lukewarm?" என்று கீதன் கேள்வி எழுப்பினார். லூக்வாம் கிறிஸ்டியனிட்டி. வெதுவெதுப்பான விசுவாசத்தை அவர் எதிர்த்தார். நீங்கள் வாழும் ஒவ்வொரு நாளும் இயேசுவின் இரத்தத்தின் மதிப்பை நிரூபிக்க வேண்டும் என்று அவர் ஒரு மெய்யான, புனிதமான, முழுமையான விசுவாசத்திற்குள் மனிதர்களை அழைத்தார். இன்றைய கிறிஸ்தவ உலகம் பழுதான இருட்டறையில் வாழ பழகிவிட்டது. அழிவுக்கு செல்லும் பழைய வழிகளிலும், சிறைப்பட்ட அழுக்கு மனப்பாங்குகளிலும், முறையற்ற நடைமுறைகளிலும் சிக்கி தவிக்கிறது. கிறிஸ்தவம் என்பது ஒருவன் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சாயலாகிற வாழ்க்கை என்பது மறைந்து போய், அது ஒரு மதச்சாயம் பூசி மேடையில் உடைமாற்றி காட்சி காட்டும் மாய தோற்றமாக மாறிவிட்டது என்று கீத் எழுதினார். இந்த வரிகள் நம்மை தோலுரிக்கின்றன. அவருடைய பாடல்களும், உரைகளும், எழுத்துக்களும் நம் ஆவியை கிள்ளுகிறது, கிளறுகிறது. "Going to church doesn't make you a Christian anymore than going to McDonald's makes you a hamburger." ஒருவன் சபைக்கு போவதால் தான் கிறிஸ்தவன் ஆகிவிடுவான் என்றால், ஒருவன் மெக்டொனால்டுக்கு போனால் மாறிவிடுவானா? நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள்? நீங்கள் யாருக்காக பாடுகிறீர்கள்? நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்காக முழுமையாக அர்ப்பணித்திருக்கிறீர்களா? உங்கள் இசை, உங்கள் ஊழியம், உங்கள் குடும்பம், உங்கள் வேலை எல்லாம் யாருக்காக? உங்கள் வாழ்க்கை ஒளியா அல்லது ஒளியா? உங்கள் வாழ்க்கை நோக்கம் நிறைந்த வாழ்க்கையா? நோக்கம் நிறைந்த ஊழியமா அல்லது உட்கார்ந்து பேசும் குரலா? ஊழியம் அது. அது ஒரு நோக்கமுள்ள வாழ்க்கை. தேவனுக்காக, பிறருக்காக செலவழிக்கப்படும் வாழ்க்கை. ஈடுபாடும், அர்ப்பணிப்பும், நம்பிக்கையும் நிறைந்த செயல்பாடு மிக்க வாழ்க்கை. ஆனால் குரல் பேசுகிறது, ஒலிக்கிறது, செயல்படுவதில்லை. ஊழியம் இது. ஒவ்வொரு நாளும் ஊற்றுகிற அர்ப்பணிப்பு. ஆனால் ஒளி சிறிது நேரம் கேட்கப்படும், பிறகு மறக்கப்படும். கீத்தின் தீ தீ இன்னும் எரிகிறது. இன்னும் பரவுகிறது. இன்னும் அழைக்கிறது. இது கீத்ரி நம்மை நோக்கி விடுத்த கடைசி வார்த்தை போல் இருக்கும். இது சலனமற்ற சத்தமான வாக்கியம் இல்லை. இது ஒரு மௌன அழைப்பு. இது நம் ஒவ்வொருவருக்கும் எடுக்கப்படும் ஒரு தனிப்பட்ட சவால். கீத் நம் ஒவ்வொருவரையும் விரல் நீட்டி கேட்கும் கேள்வி, "நீ எதற்காக வாழ்கிறாய்?" அவர் ஒரு தீர்க்கமான பாரத்தோடு வாழ்ந்தார். "நீங்கள் இயேசுவுக்காக வாழவில்லை என்றால், நீங்கள் வேறு யாருக்காக வாழ்கிறீர்கள்?" இது அவர் அடிக்கடி கேட்ட கேள்வி. அதுவே கீதரின் வாழ்க்கை. "My music is about loving Jesus and loving His people." இதுதான் கீர்த்தியின் வாழ்க்கையின் மையமான உண்மை. அவருடைய பேச்சுக்களில் அனல் இருந்தது. அவருடைய பாடல்களில் இதயம் பிளந்தது போல் இருந்தது. அவருடைய எழுத்துக்களில் ஆழமும் அழுத்தமும் இருந்தன. அவருடைய உண்மையும் உத்தமமான விசுவாசமும் ஏராளமான உள்ளங்களை தொட்டன. "I'd rather have nothing, and have Jesus, than have everything, and lose Him." உலகம் முழுவதையும் ஆதாயம் செய்தேன் என்றாலும் இயேசுவை இழந்தால் அது வீணே. என்னிடம் எதுவும் இல்லை எனிலும் இயேசு மட்டுமே இருந்தால் போதும் எனக்கே. இது அவர் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு. கீத் பலமுறை தேவனிடம், "தேவனே, என் உள்ளத்தின் இந்த கடுமையை கொஞ்சம் குறைத்து, என் தீவிரத்தை கொஞ்சம் மென்மையாக்கும்" என்று ஜெபித்தார். ஆனால் தேவன் அவருடைய கடுமையை குறைக்கவில்லை. அவருடைய மும்முறத்தை தணிக்கவில்லை. மாறாக தேவன் அவருடைய ஆர்வத்தையும் மும்முரத்தையும் இன்னும் அதிகமாக்கினார். அது ஒழுங்காக்கப்பட்டது ஊழியமாக மாற்றப்பட்டது. ஊழியத்தின் விரிவாக்கம்.
கீத் கிரீன், மெலடி இருவருடைய வாழ்க்கையில் இனிய ஆசீர்வாதமான ஒரு புதிய வரவு. ஆம், அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். தேவனை தன் முழு இருதயத்தோடு தேடிய ஜோசையா டேவிட் என்ற இரண்டு அரசர்களின் பெயரை அவர்கள் தங்கள் மகனுக்கு சூட்டினார்கள். கீர்த்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன்பின் இரண்டாவது பிள்ளை பெத்தனி கிரேஸ். அதன்பின் ரெபேக்கா. குடும்பம் பெரிதாயிற்று. வீடு எப்போதும் மக்களால், ஆரவாரத்தால், இசையால், வேலை பழுவால் நிரம்பி இருந்தது. பெரும்பாலும் சுற்று பயணம். வீட்டில் இருந்தாலும் ஓய்வில்லை. ஓயாத ஓட்டம். இப்போது அவருடைய வாழ்க்கை ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. கலிபோர்னியாவின் அந்த சிறிய பகுதியில் இருந்த அவருடைய ஏழு வீடுகளில் ஏறத்தாழ 70 பேர் வசித்தார்கள். மேலும் பலர் வர தொடங்கினார்கள். பாதுகாப்பும் சவாலாக இருந்தது. எல்லாரும் தங்குவதற்கு போதுமான வசதி இல்லாததால் அவர்கள் நகரத்துக்கு வெளியே பறந்து விரிந்த பண்ணைகளை வாங்கி தேவனுடைய ஊழியத்தை தொடர முடிவு செய்தார்கள். இதே நேரத்தில் அவர்கள் எழுதி கொண்டிருந்த "Last Days Ministries" என்ற செய்தித்தாள் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மாதா மாதம் 10,000 பிரதிகள் அச்சடித்து தபாலில் அனுப்ப வேண்டி இருந்தது. இதற்கு சரியான அச்சகமும், அனுபவமிக்க பணியாட்களும், நிர்வாக திறனும் தேவைப்பட்டது. இவைகள எல்லாம் மனதில் வைத்து கொண்டு அவர்கள் டெக்சாஸுக்கு குடிபெயர்ந்தார்கள். அங்கு ஒரு பெரிய பண்ணையை தேடி கண்டுபிடித்து வாங்கினார்கள். அச்சகம் கட்டினார்கள், வீடுகள் கட்டினார்கள், ஊழிய கூடங்கள் அமைத்தார்கள். குட்டி விமானம் ஏறி இறங்குவதற்கு ஓடுதளத்தையும் அமைத்தார்கள். ஏன் அந்த பண்ணை நகரத்தில் இருந்து மிக தொலைவில் இருந்தது. நகரத்துக்குள் சென்று வரவே பல மணி நேரங்கள் ஆயின. கீத் இசை நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருந்தது. தேவனுடைய ஊழியங்களுக்காக பல இடங்களுக்கு சென்றார். டெக்சாசின் பல பகுதிகளுக்கு சென்றுவரவே நாட்கணக்கில் ஆனது. மேலும் அந்த பகுதியில் இருந்த பல பண்ணைகளில் தனியாருக்கு சொந்தமான விமான ஓடுதளம் இருந்தது. இது அன்று மிக சாதாரணமான ஒன்று. ஒரு சிறிய விமானத்தை வாடகைக்கு எடுத்து அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து தேவனுடைய பணியை தொடர்ந்தார்கள்.
ஐரோப்பா பயணத்தின் தாக்கம். கீத் பல ஆல்பங்களை வெளியிட்டார். அவருடைய பாடல்கள் கிறிஸ்துவ வட்டாரத்தில் மிக பிரபலமாகி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊழியம் விரிவடைந்தது. சில ஆண்டுகளாக ஓய்வின்றி தொடர்ந்து மும்மரமாக ஊழியம் செய்ததால் மெலடிக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சிறிய இடைவெளிக்காக அவர்கள் ஐரோப்பாவுக்கு செல்ல முடிவு செய்தார்கள். ஆனால் ஓய்வாக இருக்க வேண்டிய பயணம் ஊழிய பயணமாக மாறிற்று. கீத் கிரீன் ஐரோப்பாவுக்கு வருகிறார் என்று தகவல் பரவியது. மக்கள் அவரை சந்திக்க விரைந்தார்கள். கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. சபைகளில் பேச வருமாறு அழைத்தார்கள். அவரை பார்க்க துடித்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு அவர்களை வரவேற்றார்கள். அவர்கள் திட்டமிட்டிருந்த ஓய்வு பயணம் பரபரப்பான ஊழியமாக மாறியது. ஆனாலும் தேவன் தம் இறையாண்மையின் படி அந்த பயணத்தை ஒரு புதிய நோக்கத்திற்காக பயன்படுத்தினார். ஆம், அங்கு அவர்கள் இருவரும் "Youth With Mission" என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்த ஒரு தம்பதியை சந்தித்தார்கள். அவர்கள் வாலிபர்கள் தேவனுக்காக வாழ வேண்டும் என்ற பாரத்தினால் ஏவப்பட்டு இந்த அமைப்பை உருவாக்கி அவருடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அதோடு "Operation Mobilization" என்ற அமைப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்களையும், ஐரோப்பா முழுவதும் பல பகுதிகளில் தேவனுக்காக பணியாற்றிய மிஷனரிகளையும் அவர்கள் சந்தித்தார்கள். இந்த சந்திப்புக்கள் கீர்த்தின் உள்ளத்தை தொட்டன. இதனால் அவர்களுடைய பார்வை விரிவடைந்தது. இதுவரை அவர் அமெரிக்க சபையின் நிலையை பற்றியே கவலைப்பட்டார். ஆனால் இப்போது அவர் அகில உலக கிறிஸ்துவின் சரீரத்தை பார்க்க ஆரம்பித்தார். உலகமெங்கும் தேவனுடைய மக்கள் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள், பெயர் தெரிந்தவர்கள், பெயர் தெரியாதவர்கள், திரைக்கு பின்னால் பெருந்திரளான சாட்சிகள் தேவனுடைய ராஜ்ியத்திற்காக அமைதியாக, தீவிரமாக, உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் பார்க்க ஆரம்பித்தார். இந்த அனுபவம் கீர்த்தின் உள்ளத்தில் ஒரு புதிய தூண்டுதலை ஏற்படுத்தியது. தேவனுடைய சபை என்பது ஒரு நாட்டுக்குள் அடைபட்டது அல்ல. அது ஒரு உலகளாவிய செயல் என்று பார்க்க தொடங்கினார். ஐரோப்பாவில் இருந்து திரும்பிய பின் உள்ளத்தில் ஒரு புதிய உந்துதல் ஏற்பட்டிருந்தது. தேவன் உலகம் முழுவதும் செய்து கொண்டிருக்கும் ஒரு பறந்த காட்சியை அவர் கண்டார். கீத் தன் தரிசனத்தை வாலிபருடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். அவர் ஒரு புதிய ஆல்பத்தை வெளியிட்டார். அதில் ஒரு பாடல் வரிகள் இதோ: "இயேசு செல்வதற்கு கட்டளையிடுகிறார். ஆனால் நாம் வேறு திசையில் செல்கிறோம். அவர் தான் ஒருவராகவே பாரத்தை சுமக்கிறார். அவருடைய பிள்ளைகள் விளையாடுவதில் பரபரப்பாக இருக்கிறார்கள்." இது அவர் அமெரிக்காவில் சபைகளில் பார்த்த நிலைமையை சித்தரிக்கிறது. அலட்சியமான சபைகள், விழிப்பற்ற விசுவாசிகள், சௌகரியமாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை. அவருடைய செய்தி மிக எளிமையானது. ஆனால் ஊடுருவி குத்தும். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. மிஷனரிக்கு மட்டுமல்ல, பிரசங்கிமார்களுக்கு மட்டுமல்ல, ஞாயிறு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு விசுவாசியும் அழைக்கப்படுகிறான். ஒவ்வொரு விசுவாசியும் வெளிச்சத்தை பெற்றிருக்கிறான். அந்த வெளிச்சம் இருளில் ஒளிவிச வேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் ஜீவனை பெற்றிருக்கிறான். அந்த ஜீவன் அவருடைய வாழ்வில் தைரியமாக, தெளிவாக, தியாகமாக வெளிப்பட வேண்டும். ஊழியம் என்பதை யாரோ ஒருவர் செய்யும் வேலை என்ற எண்ணத்தை கைவிடுங்கள். இது நீங்கள் உங்களுடைய வட்டாரத்தில் சாட்சியாக வாழ்ந்து காட்ட வேண்டிய ஒன்று என்று அவர் கூறினார். கீத்தை பொறுத்தவரை இது ஒரு ஆலோசனை இல்லை. இது இயேசுவின் கட்டளை. சபை இந்த கட்டளையை புறக்கணிக்க கூடாது என்றார். உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற நன்மைகளை...
உங்களுக்கே வைத்துக் கொள்ளாதீர்கள். பகிருங்கள். சாட்சியாக இருங்கள். உங்கள் சுற்றத்தாரிடம் உங்களிடத்திலேயே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வெளிப்படுத்துங்கள் என்று அவர் கூறினார்.
கீர்த்தியின் ஊழியத்தில் அவருடைய மனைவி மெலடிக்கு பெரும் பங்கு உண்டு. கீர்த்தின் பாரத்தையும் பார்வையும் மெலடி ஜெபத்தாலும் பொறுமையாலும் தாங்கினார். அவர் கீர்த்தின் மனைவியாக இருந்தார் என்பதை விட கீர்த்தின் ஆவிக்குரிய கூட்டாளியாக, அவருடைய பாரத்தை சுமக்கும் பங்காளியாக, அவருடைய இணைந்திருந்தார் என்று சொல்லலாம். இருவரும் இசைக்காகத்தான் ஒன்றிணைந்தார்கள். ஆனால் பின்னர் இருவரும் இயேசுவுக்காக இசையை விட்டு கொடுத்தார்கள்.
கீத் மேடைகளில் கூட்டங்களில் பேசியபோது மெலடி உள்ளத்தில் அழுதார். அவருடைய ஜெபங்கள், அவருடைய கதரல்கள், அவருடைய தியாகங்கள் அனைத்தும் அமைதியான பானபலியாக கீர்த்தின் ஊழியத்திற்கு தூணாக இருந்தன. கீர்த் பாடிய பாட்டுகளில் மெலடியின் வார்த்தைகள், கவிதைகள், உந்துதகள் நிறைந்திருந்தன. சில பாடல்களை அவரே எழுதினார். "தர் இஸ் ரெடிமர்" என்ற பாடலை எழுதியவர் அவரேதான். பரிசுத்தமான உணர்வும் சாரமும் உள்ள வரிகளும் நிறைந்த இந்த பாடல் இன்றுவரை உலகம் முழுவதும் பாடப்படுகிறது.
மெலடி தன் சுதந்திரமான சிந்தனையாலும் துடிப்பான ஊக்கத்தாலும் இன்றுவரை கீர்த்து சாட்சியை உயிர்துளிப்போடு வைத்திருக்கிறார். அவர் எழுதிய "நோ காம்ப்ரமைஸ்" என்ற வாழ்க்கை வரலாறு நூல் இன்னும் வாசிக்கப்படும் புத்தகம்.
"லாஸ்ட் டேஸ் மினிஸ்ட்ரி" ஆயிரம் பாடல்கள் இருந்தும் இருதயங்கள் இயேசுவுக்காக உடையவில்லை என்றால் உருகவில்லை என்றால் அது வெற்றிடமே என்று அவர்கள் உணர தொடங்கினார்கள். எனவே அவர்கள் "லாஸ்ட் டேஸ் மினிஸ்ட்ரி" என்ற ஊழியத்தை தொடங்கினார்கள். இது ஒரு எழுச்சி. இது ஒரு தீர்க்கதரிசியின் அறைகூவல். மனிதர்கள் இயேசுவை உண்மையாக அறிய வேண்டும், அன்புடன் வாழ வேண்டும், தன்னலம் இல்லாமல் செயல்பட வேண்டும், சுத்த மனதுடன் இயேசுவுக்காக நிலையாக நெருக்க வேண்டும் என்ற முழக்கம் இது. ஒரு புனித அழைப்பு. நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என ஆழ்ந்த உணர்வு அவருடைய உள்ளத்தில் வெந்து கொண்டிருந்தது. மனிதர்கள் நேரத்தை வீணாக்க கூடாது. சபை தூங்கக்கூடாது. உண்மையான விசுவாசம் சாகக்கூடாது என்ற பாரம் அழுத்தியது. இந்த பாரத்தை பார்வையை பயமுறுத்தியோ வன்முறையாக அல்ல மாறாக ஆழமான அன்போடு அவர்கள் வெளியிட்டார்கள். அதற்கேற்ப "ஐம்நாட் கால் என்டன் ஐம் கால்டிஸ்டப்த கம்பர்பஅண் கம்பர்ட்" என்று அவர் கூறினார்.
"லாஸ்ட் மினிஸ்ட்ரி" மனிதர்களை விசுவாசியின் அடித்தளத்திற்கு திருப்பும் ஒரு இயக்கமாக மாறியது. இயேசுவின் இரண்டாம் வருகைக்கு மக்களை சபையை ஆயத்த செய்ய வேண்டும் என்பது அவருடைய பாடல்கள், கட்டுரைகள், வீடு ஊழியம் எல்லாவற்றுக்கும் ஒரே நோக்கம். இசை இசைக்குள் இருந்த ஊழியம். அவருடைய பாடல்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும். அனைவருக்கும் சவால் விடுக்கும். அனைவருடைய உள்ளத்தையும் கிளரும் பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு வரியும் தேவ மக்களுக்கு ஒரு அழைப்பு விடுத்தது. ஒரு சவாலை முன்வைத்தது. அவைகளில் அவருடைய கண்ணீர் வழிந்தோடியது.
"ஓ லார்ட் யூ ஆர் பியூட்டிபுல்" ஓ கர்த்தாவே நீர் அழகானவர் என்ற ஒரு அற்புதமான ஆராதனை பாட்டில் எழுதிய போது "காட் டேக் மை ஐஸ்ஆ மசெல்ட் மீ ஒன்லி யூ" தேவனே என்னை பார்க்கும் என் கண்கள் என்னை பார்ப்பதை நிறுத்துவிட்டு உம்மை மட்டுமே பார்ப்பதாக என்வர் சொன்னார். இந்த பாடல் ஒருவன் கடும் வேதனையில் இருக்கும்போது கூட தன்னை பார்க்காமல் இயேசுவின் அழகை மட்டும் பார்க்க தூண்டும் அழகான பாடல். "கரியேட் இ மீளீன்ஹட் காட்" தேவனே என்னில் தூய்மையான இருதயத்தை உருவாக்கும் என்ற பாடல் ஒருவனுடைய உள்ளத்தின் கதரல். இந்த பாடலை நான் தமிழில் கவித நேயத்தோடு மொழிபயக்கம் என்று தோற்று போனேன். "ஐடவா நான் உம்மை விட்டு விலக விரும்பவில்லை" என்ற பாடல் தன் அருவருப்பான பாவத்தை கண்டு தேவனுடைய பரிசுத்தத்திற்காக ஏங்குகிற ஒருவனுடைய இயக்கத்தின் எதிரொலி இது. துரித கதையில் அவசரம் அவசரமாக எழுதப்பட்ட பாடல் இல்லை. பாடல் வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பாடலும் இல்லை. வார்த்தைகள் மேலோட்டமானவை இல்லை. இது ஒரு பாவியின் உள்ள கதரல். இது ஒரு நிமிடம் கூட இயேசுவை விட்டுவிடக்கூடாது விலக கூடாது என்று இயேசுவை பற்றி பிடித்திருக்க விரும்பும் ஒரு உள்ளத்த தவிப்பு தான். முன்பு இருளில் வாழ்ந்ததை நினைத்தபோது இயேசுவின் ஒளி எப்படி வெள்ளம் போல் உள்ளத்தில் பாய்ந்தது என்பதை "யுவர் லவ் பரோக்ூ" என்று பாடினார். இந்த அன்பு இதற்கு முன் எனக்குள் இருந்ததில்லை. இந்த தெய்வீக அன்பு நீரே எனக்குள் வைத்த தூய்மையான அன்பு. இது நான் உற்பத்தி செய்த அன்பல்ல என்ற உணர்வு எனக்குள் ஆழமாக இருக்கிறது என்பதை "யூ பட்தி லவ் இன் மீ இன் மைஹட்" என்ற பாடல் மூலம் தெரிவித்தார். இந்த பாடலை கேட்கும்போது கீத் வெறுமனே ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல. இவர் ஜெபிக்கிறவர். இவர் சத்தியத்தை சிந்திக்கிறவர். இவர் மக்களை தேவன்பால் அழைக்கிறவர் என்று புரிந்து கொள்ளலாம்.
பொதுவாக கலைஞர்கள் மனிதர்களின் மனங்களை வசப்படுத்த வேண்டும் என்பதற்காக பாடுவார்கள். ஆனால் கீர்த்தியின் மக்களின் உள்ளங்களை இயேசுவுக்காக மாற்ற வேண்டும் என்பதற்காக பாடினார். அவருடைய இசை உணர்ச்சிகளை கிளந்தெழுப்பும் மலிவான இசை அல்ல. அவருடைய இசை ஒரு விழிப்புணர்வு. ஒரு அழைப்பு. அதனால்தான் அவருடைய பாடுகளை இன்றுவரை புதிய தலைமுறையையும் உருக்கிக் கொண்டே இருக்கின்றன. மறக்க முடியாத வார்த்தைகள். மறக்க முடியாத குரல். மறக்க முடியாத சிந்தனைகள்.
ஜூலை 28, 1982 புதன்கிழமை கார்டன் வேலி. அதுதான் கீத்கிரீன் வாழ்ந்த பண்ணை. அன்று ஜான் ன் என்ற அவருடைய மிக நெருக்கமான நண்பர் குடும்பத்தோடு அங்கு வந்திருந்தார். அவருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். அன்று அங்கு விமான ஓட்டியும் இருந்தார். குழந்தைகள் சிறிய விமானத்திலிருந்து பண்ணையை பார்த்தால் பரவசப்படுவார்கள் என்ற யோசனை வந்தது. கீத்தும் சம்மதித்தார். சரி பார்க்கலாம் என்று சொல்லி அவர் மெலடியையும் கூப்பிட்டார். ஆனால் மெலடி கர்ப்பமாக இருந்ததாலும் அது சிறிய விமானம் என்பதாலும் இல்லை. நானும் ரெபேக்காவும் வீட்டில் இருக்கிறோம் என்று மெலடி தான் வரவில்லை என்று சொல்லிவிட்டார். ரெபேக்காவுக்கு அப்போது இரண்டு வயது. கீர்த் மகன் ஜோசயாவையும் மகள் பெத்தனியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்த நண்பரோடும் அவருடைய ஆறு குழந்தைகளோடும் விமானத்தில் ஏறினார்கள். மெலடி வெளியே நின்று கையசைத்தார்.
விமானம் புறப்படுவதற்கு முன் கீத் மெலடியை நோக்கி, "நான் திரும்பி வரவில்லைனா ரெபேக்காவே நல்ல தேவ மகளாக வளர்க்க வேண்டும். சரியா?" என்றார். எப்போதும் போல் கீத விளையாட்டாக சொல்கிறார் என்று அவர் நினைத்தாலும் இந்த வார்த்தைகளை மெலடி ரசிக்கவில்லை. அந்த வார்த்தைகள் மெலடியின் உள்ளத்தில் ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஆமாம் நிச்சயமா என்று பதில் சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றம் ஏற்பட்டது. இவர் எப்போதுமே இப்படித்தான் என்று நினைத்து விட்டுவிட்டார். பின் மெலடி சிரிப்புடன், "அப்போ அடுத்த குழந்தைக்கு என்ன பேர் வைக்கணும்? உன்னுடைய பெயர் வைக்கணுமா?" கீத், "இல்ல எனக்கு டேனியல்னு பேர் பிடிக்குது" என்று கீர் சிரித்தார். இருவரும் சிரித்து கொண்டே வழிபிரிந்தார்கள். மெலடி வீட்டுக்குள் போனார். ஒரு சிறிய பதற்றம் இன்னும் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர் கணினி முன் உட்கார்ந்தார். அப்போது தொலைபேசி மணி அடித்தது. "மெலடி விமானம் கீழே விழுந்துவிட்டது" என்ற ஒரு குரல்.
மெலனி பதரியபடி ஓடினார். பலரும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த காட்டு பகுதியில்ிருந்து கரும்புகை மிதந்து வந்தது. ஏன் இப்படி நடந்தது? என்ன ஆச்சு? என்ன தவறாக இருக்கும்? நெஞ்சுக்குள் எழுந்த வினாக்களுடன் மெலடி ஓடினார். வேகம் வேதனை வேலியை கடந்து சுற்றுச்சுவரை தாண்டி அந்த இடத்தை அடைந்தார். அங்கு மீட்புக்குள் ஏற்கனவே வந்திருந்தது. மெலடி விமானத்தை தேடினார். விமானம் கருகி சாம்பலாக கிடந்தது. அது கீழே விழுந்து வெடித்து சிதறி இருந்தது. "என் குழந்தைகள் எங்கே? கீத்து எங்கே? மற்ற ஆறு குழந்தைகள் எங்கே?" என்று மனம் அதிர்ந்தது. அந்த கருகி விமானத்தை நோக்கி அவர் ஓட ஆரம்பித்தார். அப்போது கர்த்தரே அவரோடு பேசியது போல், "அவர்கள் இப்போது என்னோடு இருக்கிறார்கள். நீ தேட வேண்டாம். திரும்பி போ" என்று ஒரு சத்தம். மெலடி நின்றார். திரும்பினார்.
அதிகாரிகள் விமானத்தில் யார் யார் இருந்தார்கள் என்று கேட்டார்கள். மெலடி எண்ண தொடங்கினார். மொத்தம் 12 பேர். கீத, மூன்று வயது ஜோசையா, இரண்டு வயது பெத்தனி, அவருடைய நண்பருடைய குடும்பத்தின் ஆறு பிள்ளைகள் உட்பட எட்டு பேர். மொத்தம் 12 பேர். அந்த விமானத்தில் மொத்தம் ஆறு இருக்கைகள் தான் உண்டு. ஆறு பெரியவர்கள் பயணிக்கலாம். ஆனால் அன்று நான்கு பெரியவர்கள், எட்டு குழந்தைகள் பயணித்தார்கள். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தால் தொடர்ந்து பறக்க முடியவில்லை. இயந்திரத்தின் ஆற்றல் போதாமையினாலும் விமானத்தில் சுமை அதிகமாக இருந்ததாலும் விமானம் சமநிலை இழந்து கீழே விழுந்தது. ஒரு சில நொடிகளில் 12 உயிர்கள் பரிபோயின. கீத்துக்கு அப்போது வயது 28. அந்த நாள் மெலடியின் வாழ்க்கை பிளந்த நாள். அந்த நாள் அவருடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. அந்த வேதனையின் சுமை, அந்த நினைவின் இருள் அவை அவருடைய உள்ளத்தை ஒரு நாளும் கிழிக்காமல் விட்டதில்லை.
இந்த இழப்பை மெலடியால் தாங்க முடியவில்லை. அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார். இரண்டு வயது ரபேக்கா அவருக்கு பெரிய துணையாக இருந்தாள். அவளுக்காகவாவது இயல்பான அன்றாடைய வாழ்க்கை வாழ வேண்டும் என்று மலடிக்கு தோன்றியது. ஆனால் மனதுக்குள் தொடர்ந்து ஒரு ஏக்கம். கேள்விகள். தேவன் ஏன் இப்படி செய்தார்? கீர்த்தி எவ்வளவோ கனி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தாரே. தேவன் அவரை இப்படியா அழைக்க வேண்டும்? கீ தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லவில்லையே. எழுத வேண்டிய அனைத்தையும் எழுதவில்லையே என்று அங்கலாய்ப்போ தவிப்போ தத்தளிப்போம். தேவன் கீத்தை இப்படி எடுத்து கொள்வார் என்பதை மெலடியால் நம்ப முடியவில்லை. ஏற்க முடியவில்லை.
அவர்கள் உருவாக்கி இருந்த சமூகத்தின் உண்மையான ஆழமும் அழகும் அப்போது வெளிப்பட்டது. அந்த சமுதாயம் அந்த சூழ்நிலையில் மெலடிக்கு உருதுணையாக இருந்தது. அவர்கள் மெலடிக்கு மனமுவந்து அன்பும் கவனமும் கரிசனையும் உதவியும் அளித்தார்கள். ஆயினும் மெலடிக்கு அந்த நாட்கள் நெருப்பில் நடப்பது போலவே இருந்தது. அவர் நகரத்துக்கு சென்றபோது எல்லா இடங்களிலும் மக்கள் அந்த விமான உபத்தை பற்றி பேசி கொண்டிருப்பதை கவனித்தார். செய்தித்தாள்களில் விமான விபத்து, 12 பேர் இறப்பூர் என்ற செய்தி அடிக்கடி வெளியிடப்பட்டது. இதை கேட்டபோதும் பார்த்த போதும், மெலடிக்குள் ஒரு வலி எழும்பியது. நீங்கள் பேசி கொண்டிருக்க அந்த 12 பேர் என் குடும்பம், என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள், என் நண்பர்கள். அந்த செய்தி என் வாழ்க்கை என்று கதற வேண்டும் போல் தோன்றும்.
பத்திரிகையாளர்கள் வீட்டுக்கு கூட்டம் கூட்டமாக வந்தார்கள். தொலைபேசியில் தொடர்ந்து அழைப்புக்கள் வந்து கொண்டே இருந்தன. லட்சக்கணக்கான கடிதங்கள் வந்தன. துக்கத்தின் நடுவிலும் அத்தனையையும் கையாண்டார். பதில்கள் எழுதினார். "லாஸ்ட் டேஸ் மினிஸ்ட்ரி" செய்தி மடலில் ஒரே நேரத்தில் எல்லாருக்கும் அழுத்தமாக எழுதினார். எல்லாரும் அந்த துயரத்தை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர் அந்த இழப்பின் உண்மையான வலியை சுமந்தார்.
இந்த வேதனை காலத்தில் கர்த்தர் மெலடிக்கு ஒரு வசனத்தை நினைப்பூட்டினார். இது அவர் சிந்தித்தது அல்ல. இது அவரை தேற்றுவதற்காக பரத்திலிருந்து வந்த ஒரு ஆறுதல். "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததையாகில் மிகுந்த பலனை கொடுக்கும்." யோவான் 12:24. முதலாவது இந்த வசனம் அவருடைய இருதயத்தில் தானாக வந்து விழுந்தது. பின்னர் வேறொருவர் ஒரு நாள் மெலிட வந்து அதே வசனத்தை கர்த்தர் தனக்கு சொன்னதாக சொன்னார். இது தற்செயலாக இருக்க முடியாது என்று மெலடி புரிந்து கொண்டார். அந்த வசனத்தை அவர் பிடித்து கொண்டார். அந்த பெருந்துயரத்தில் சாம்பல்களின் மத்தியில் அந்த வசனம் அவருக்கு ஒரு தூண்டுதலாய், அனலாய், ஒளிக்கீற்றாய் இருந்தது. எல்லாம் தேவனுடைய கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது என்று அவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தார். அந்த ஒரு வசனம் துக்கத்திலிருந்து அவருக்கு நம்பிக்கையின் நங்கூரமாயிற்று.
கீத கிரீன் இறந்த சில ஆண்டுகளுக்கு பிறகு மெலடிக்கு அமெரிக்காவின் பல இசை விழாக்களில் பேச அழைப்பு வந்தது. ஒரு காலத்தில் கீத் பங்கேற்ற அதே விழாக்களில் இப்போது மெலடி பேசியபோது அவர் ஒரு விஷயத்தை கவனித்தார். பலர் அவரிடம் வந்து, "கீத்கிரீன் இறந்த செய்தியை கேள்விப்பட்டேன். அவர் பேசிய சில கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அவருடைய பார்களை கேட்ட பிறகுதான் நான் தேவனுடன் என் வாழ்க்கையை பற்றி தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தேன்" என்று சொன்னார்கள். வேறொருவர், "நான் தேசிய நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த போது வானொலியில் கிறிஸ்தவ இசைக்கலைஞர் கீதியின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார் என்று செய்தியை கேட்டேன். அந்த செய்தியை கேட்டவுடன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கதறி அழுதேன்" என்று கூறினார். அவர் ஒரு விசுவாசி. கீர்த்தின் பாடுகளை பலமுறை கேட்டு விசுவாசியானார். அந்த கணத்தில் நான் தேவனிடம், "இனி இந்த தலைமுறைக்கு காரியங்களை சத்தியமாக சொல்ல போகிறவர் யார் ஆண்டவரே? எங்கள் தலைமுறைக்கு பேசப்போகிறவர் யார்?" என்று கேட்டேன். அந்த கேள்விக்கு தேவனிடமிருந்து வந்த பதில் அவருக்கு தெளிவாகவும் நேரடியாகவும் கேட்டது. "நீயே. நீயே பேச வேண்டும்" என்று சொன்னார்.
இதுபோன்ற அனுபவத்தை பலர் பகிர்ந்து கொண்டார்கள். "கீத்தின் மரணம் என்னை உசிப்பியது. நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்த்தியது" என்று பலர் சொன்னார்கள். கீத்து உயிரோடு இருந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வாழ்த்தினார்கள். அவருடைய ஊழியத்தை கொண்டாடினார்கள். ஆனால் தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும். தேவனுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் அப்போது அவர்களுக்கு இழவில்லை. இப்போது அவர் இல்லாத போது நான் என்ன செய்ய வேண்டும்? நான் எப்படி வாழ வேண்டும்? என்று அவர்கள் கேட்க தொடங்கினார்கள். அவருடைய கேள்விகளுக்கு தேவன் பதிலளிக்க தொடங்கினார்.
"ஒருவன் கிறிஸ்தவன் என்றால் அவன் உலகுக்கு ஒளியாக இருக்க வேண்டும்." இதுதான் கீர்த்தினின் கடைசி செய்தி. இந்த அழைப்பு ஒரு சிலருக்கு மட்டுமல்ல. பாஸ்டர்களுக்கு மட்டுமல்ல. மிஷனரிகளுக்கு மட்டுமல்ல. இந்த அழைப்பு ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. ஒவ்வொருவரும் ஆண்டவருக்காக ஒளியாக இருக்க அழைக்கப்பட்டவர்கள். அந்த செய்தி பல உள்ளங்களை தொட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் நித்தியத்துக்குள் நுழைந்த பிறகு அவரால் தொடங்கப்பட்ட வேலையை இப்போது நாம் தொடர வேண்டும் என்று மக்கள் உணர்ந்தார்கள்.
பல ஆண்டுகள் கழிந்த பிறகு ஒரு நாள் மெலடி அமெரிக்காவின் ஒரு சிறிய பகுதியில் உள்ள பெட்டி கடைக்கு சென்றார். அங்கே ஒரு பெண் அவளுடைய கழுத்தில் ஒரு சிறிய சிலுவை தொங்கிக் கொண்டிருந்தது. அந்த சிலுவையை பார்த்தவுடன் மெலடிக்கு கீத தனக்கு கொடுத்த சிலுவை நினைவுக்கு வந்தது. அவள் அந்த பெண்ணிடம், "நீங்கள் கிறிஸ்தவரா?" என்று கேட்டாள். அந்த பெண் கொஞ்ச நேரம் கழித்து, "ஆம். நீங்கள்?" என்றாள். மெலடி சிரித்தபடி, "ஆம் நான் கிறிஸ்தவர்தான். நான் டெக்சாசில் உள்ள லாஸ்ட் இயேஸ் மினிஸ்ட்ரியில் இருந்து வருகிறேன். உங்களுக்கு தெரியுமா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டாள். "லாஸ்ட் இயர்ஸ் மினிஸ்ட்ரியா தெரியவில்லையே. கேள்விப்பட்டதில்லையே" என்றாள் அந்த பெண். "அப்படியா? கீத்கிரீனை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார் மெலடி. அந்த பெண் உடனே, "கீத்கிரீன் ஓ அவருடைய பாடல்களால் தான் நான் ஆண்டவரையே அறிந்தேன்" என்றார்.
மெலடி அதிர்ந்து போனார். எத்தனையோ வருடங்கள் கழிந்த பிறகும் கீத கிரீன் இன்னும் கனி தந்து கொண்டிருந்தார். அவர் ஏழு ஆண்டுகள் மட்டுமே கிறிஸ்தவனாக வாழ்ந்தார். ஆனால் அந்த குறுகிய காலத்தில் அவருடைய வாழ்க்கை ஏற்படுத்திய தாக்கம், புரிது ஏற்படுத்திய விளைவுகள் அளவிட முடியாதவை. ஒரு தீவிரமான வாழ்க்கை. அனல்நிறைந்த வாழ்க்கை. சாட்சியான வாழ்க்கை. இன்றும் அவருடைய பாடல்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. இவருடைய வாழ்க்கை இன்னும் பலரை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இவருடைய வாழ்க்கை உங்களையும் இன்று சிந்திக்க வைக்கட்டும்.
கீர்த் இறந்தபோது அவருடைய வயது 28. ஒரு மனிதன் இந்த பூமியில் 28 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து மரித்தால் அது அகால மரணம் என்றும் மிகக் குறுகிய பயணம் என்றும் உலகம் சொல்லும். ஆனால் "இட் இஸ்நாட்ஹலாங்யலிவ் இட் இஸ்ஹயூலிவத மேஸ். நீ எவ்வளவு நாட்கள் வாழ்கிறாய் என்பதல்ல. நீ எப்படி வாழ்கிறாய் என்பதுதான் காரியம்" என்று கீத கிரீன் சொன்ன வார்த்தைகளை நினைப்போட்டுகிறேன். அவருடைய வாழ்க்கை காற்றில் பறந்து போகும் ஒரு சிறு மலர் போனது அல்ல. பலருடைய வாழ்க்கை ஒருவேளை அப்படி இருக்கலாம். இருந்த இடம் தெரியாமல் எந்த தாக்கமும் ஏற்படுத்தாமல் பறந்து போகும். அதிகபட்சம் ஒரு மெல்லிய வாசனையை விட்டு செல்லலாம். ஆனால் கீதன் வாழ்க்கை அப்படி அல்ல. அவருடைய வாழ்க்கை எரிந்த ஒரு தீப்பந்தம். உயிரோட்டமான அனலுள்ள. ஒளியூட்டுகிற. தூண்டி எழுப்புகிற வாழ்க்கை. அவர் ஒவ்வொரு நாளும் மற்றவர்களை உணர்த்துகிற. கிளர்த்தெழுப்புகிற. சிந்திக்க வைக்கிற வாழ்க்கை வாழ்ந்தார். பலன்கள் அழுகுவது போல் அவருடைய ஆவி சோர்ந்து போகவில்லை. ஆவிக்குரிய உற்சாகம் சற்றும் குறையவில்லை. அவரை யாரும் தூண்டி எழுப்ப வேண்டிய தேவை இருக்கவில்லை. அவர் எப்போதும் மற்றவர்களை தூண்டி கொண்டிருந்தார். எரிகிற சுடராய் பிறருடைய வாழ்வில் ஒளியேற்றினார். அவர் வாழ்ந்த வருடங்கள் குறைவாக இருந்தாலும் அவருடைய தாக்கம் காலம் கடந்தும் தொடர்ந்து பேசுகிறது. அவருடைய மரணம் பலருக்கு ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக மாறியது. அவருடைய வார்த்தைகள், பாடல்கள், ஜெபங்கள், இயேசுவுக்கான தீவிர அன்பு, உண்மையான கிறிஸ்தவத்தை சபையிலும் வெளியிலும் சாட்சியாக காட்டிய விதங்கள் இவை இன்றைக்கும் பேசப்படுகின்றன. அவருடைய மரணம் ஒரு முடிவல்ல. அது ஒரு தொடக்கம். ஒரு ஊக்கம். ஒரு அழைப்பு. ஒரு எச்சரிக்கை. வாழ்ந்தது வெறும் 28 வருடங்கள் தான். ஆனால் இவ்வளவு குறிய காலத்தில் ஒரு தலைமுறைக்கு ஊக்கமும் சவாலும் அழைப்பும் எடுத்தார். கீத கிரீன் என்ற பெயர் இன்றுவரை இசைக்கலைஞர்களுக்கான ஒரு திசை காட்டி. வழிகாட்டி. அவருடைய வாழ்க்கை இது நிரூபிக்கிறது. ஒருவன் சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்தாலும் அதை முழுமையாக வாழ்ந்தால் அது போதும்.
அன்பான சகோதர சகோதரிகளே, கீர்த்தியின் வாழ்க்கையை கேட்டோம். அவை அவருடைய இசையை, அவருடைய அழைப்பை, அவருடைய மரணத்தை எல்லாவற்றையும் நாம் கேட்டோம் பார்த்தோம். இப்போது அவர் வாழ்ந்த வாழ்க்கை நம்மை நோக்கி ஒரு கேள்வி எழுப்புகிறது. இன்று நீங்கள் ஒரு பாடகராக, ஊழியராக, பெற்றோராக, மாணவனாக, ஆசிரியராக, மருத்துவராக, பொரியாளராக, தொழிலதிபராக யாராக இருந்தாலும் இயேசுவுக்காக முழுமையாக வாழ வேண்டிய அழைப்பு உங்களுக்கு வருகிறது.
இப்போது நாம் இந்த பயணத்தை கீர்த்தியின் பாடி ஒரு பாடலை கேட்டு முடிப்போம். இந்த பாடலை அவர் ஒரு காலை நேரத்தில் தன் வீட்டில் இருந்த ஸ்டுூடியோவில் எழுதி பாடினார். அன்று காலை மெலடி கண்வழித்த போது அவர் பாடி அழுகிற சத்தம் கேட்டது. அவர் உள்ளே சென்றார். கீ திரும்பி பார்த்து, "இன்று ஆண்டவர் என்னை தம் சிங்காசனத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த பாடல் அவருக்காக" என்று கண்ணீருட சொன்னார். வாருங்கள் அந்த பாடலை நாம் இப்போது கேட்போம். ஆமென்.